நீட் விவகாரம் “விரைவு நீதிமன்றம் விசாரணை” : மாணவர்களுக்கு பிரதமர் வாக்குறுதி : ராகுல் கேள்வி, உறுதியாக நிற்கும் CJP..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு விரைவான, கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.
PM Modi promised fast-track courts will be established to ensure severe punishment NEET exam paper leak
PM Modi promised fast-track courts will be established to ensure severe punishment NEET exam paper leakAI generated
2 min read

சிஜேபி கட்சி தொடர் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

டெல்லியை உலுக்கிய போராட்டம்

காந்தியவாதி சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணவிரதம் இருக்க, போராட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணி, மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் என டெல்லியை கதிகலங்க வைத்துள்ளது, கரப்பான் பூச்சி கட்சி

பதற்றத்தின் பிடியில் டெல்லி

இணைய சேவை முடக்கம், மெட்ரோ நிலையங்கள் மூடல், போலீஸ் தடியடி, கண்ணீர் புகை வீச்சு, மாணவர்கள் கைது டெல்லி நகரமே களேபரமாக காட்சி அளிக்கிறது.

மாணவர்களின் திரட்சி, நாடாளுமன்ற வடக்கு வாயிலையும் மூட வைத்தது. பல்வேறு ஊர்களில் இருந்து சாரைசாரையாக புறப்பட்டு வரும் மாணவர்கள், இளைஞர்கள், ஜந்தர் மந்தரின் போராட்டம் நடந்து வரும் பகுதியில் குவிந்து வருகிறார்கள்.

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு

34 நாட்களாக சிஜேபி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம், நாளாக்கு நாள் நாடு தழுவிய ஆதரவை பெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு முன் வந்தாலும், தர்மேந்திர பிரதான் பதவி விலகலுக்கு பிறகே, அதற்கான முன்னெடுப்பு என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நிற்கின்றன.

பிரதமர் மோடி ட்வீட்

போராட்டக்காரர்களோடு மத்திய அமைச்சர் நட்டா நடத்திய பேச்சுவார்த்தையும் பயனளிக்கவில்லை. இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று காலை ட்விட் மூலம் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்

மாணவர்களின் எதிர்காலத்தை விட தங்களுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு - விரைவு நீதிமன்றம் விசாரணை

பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்:மாணவர்களின் நலனும், இளைஞர்களின் எதிர்காலமுமே அரசின் முதன்மையான முன்னுரிமையாகும்.வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவான தீர்வு காண்பதை உறுதி செய்ய இந்த விரைவு நீதிமன்றங்கள் உதவும்.

யாரையும் தப்பிக்க விட மாட்டோம்

சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகள் இதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்கள் எவரும் தப்ப விடப்பட மாட்டார்கள்” என்று உறுதியளித்து இருக்கிறார்.

கரப்பான் பூச்சி கட்சி விளக்கம்

பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி பதில்

இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்கியதில் பிரதமருக்கு பங்கு உள்ளது. மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது தான். மாணவர்களிடம் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in