

குடியரசு தின விழா
President Droupadi Murmu unfurl the national flag followed by the national anthem, Jana Gana Mana, and 21-gun salute by the Indian Army Regiment of Artillery : இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் கோலாகல கொண்டாட்டம்
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, சிறப்பு விருந்தினா்கள், வீரா்கள் புடைசூழ கடமைப் பாதைக்கு வருகை தந்தனர். அவர்களை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர்.
தேசிய கொடியை ஏற்றினார் ஜனாதிபதி
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். கடமைப் பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது.
சிறப்பு விருந்தினர்கள்
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோ பலர் கலந்துகொண்டனர்.
=====