

மாணவர்களுடன் கலந்துரையாடல்
Episode 2 of Pariksha Pe Charcha is a special one. It features students from various cities across India : தேர்வு எழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வருகிறார். ”பரிக்ஷா பே சர்ச்சா” என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியில் பிரதமர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடினார்.
காணொலி மூலம் பங்கேற்பு
கோயம்புத்தூர், ராய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் குஜராத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த கலந்துரையாடலில் மாணவர்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘ குழந்தைகள் மொபைல் போன் அல்லது தொலைக்காட்சி இல்லாமல் சாப்பிடக் கூட முடியாத நிலை உருவாகி விட்டது. தொழில்நுட்ப சாதனங்கள் அவர்களுக்கு எஜமானராகி விட்டன.
தொழில்நுட்பத்திற்கு அடிமையாக கூடாது
இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மொபைல்களுக்கு அடிமையாகி விட்டீர்கள். தொழில்நுட்பம் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோர் என்று மாணவர்கள் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
வளர்ச்சிக்கு தொழில்நுட்ப பயன்பாடு
தொழில்நுட்பங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாறாக அவற்றை உங்களது திறமைகளை மேம்படுத்தவும், ஆற்றலை வளர்க்கவும் பயன்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு அல்லது மொபைல் போன்களை நம் எஜமானராக மாற அனுமதிக்கக் கூடாது. நாம் செயற்கை நுண்ணறிவை திறமையாக பயன்படுத்தலாம்.
தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்
தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதற்கு முந்தைய வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டும். நல்ல உறக்கம் தேவை. தேர்வுகளுக்கு நன்றாக தயாரானப் பிறகு நீங்கள் ஒருபோதும் பதற்றமாக உணரமாட்டீர்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் தான் உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்,
தெளிவான சிந்தனையே தலைமைப் பண்பு
தலைமைப் பண்பு என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அரசியல் கட்சி தொடங்குவதோ அல்ல; மாறாக, தெளிவான சிந்தனையும், தகவல் தொடர்பும் அத்துடன் முதலில் தன் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையுமே ஒருவரைத் தலைவராக்கும்.
தலைவராக மாற தலைமைப் பண்பு
தலைவராக உருவெடுக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். எதையும் முன்னின்று நடத்தும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்காமல், அவற்றை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதே மிகச் சிறந்த தலைமைப் பண்பாக அமையும்.
கல்வி, விளையாட்டு சமநிலை
விளையாட்டையும் கல்வியையும் சமமாகப் பாவியுங்கள். விளிம்பு நிலை மக்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த ‘பிஎம்-ஜன்மன்' போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது” என்று மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
===============