Mansoon Session : ”ஆக்கப்பூர்வமான விவாதம், கருத்துகளுக்கு மதிப்பு” : இந்தியாவின் சாதனைகள், பிரதமர் மோடி பெருமிதம்..!

மழைக்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற அனைவரும், ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Prime Minister Modi  urged everyone to extend their cooperation for constructive debates in monsoon session
Prime Minister Modi urged everyone to extend their cooperation for constructive debates in monsoon sessionAI generated
2 min read

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தோடர்

நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்​கியது. பல்​வேறு முக்​கிய மசோ​தாக்​களை தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. நீட் முறை​கேடு, விலை​வாசி உயர்​வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்​டு, சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் உள்​ளிட்ட பிரச்​சினை​களை எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

செய்தியாளர்களை சந்தித்த மோடி

மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் சாதனைகள்

விண்வெளி துறையில இந்தியா சாதனை படைச்சு இருக்கு. முதல் தனியார் ராக்கெட், விக்ரம்-1 வெற்றிகரமா விண்ணில் செலுத்தப்பட்டு இருக்கு. இந்த சாதனையை படைச்ச தனியார் நிறுவன விஞ்ஞானிங்க, அவர்களுக்கு உதவியா இருந்த இஸ்ரோவுக்கு மோடி பாராட்டு தெரிவிச்சாரு.

ராகுலை கிண்டலடித்த மோடி

இளைஞர்களோட சாதனைகளை புகழ்ந்த அவரு, 56 வயது இளைஞரை பத்தி தான் சொல்லல அப்படின்னு, ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினாரு.

ஹைட்ரஜன் ரயில், செமி கண்டக்டர் ஆலை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம், ராஜஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, அதேபோல 3வது செமி கண்டக்டர் ஆலை என வளர்ச்சி பாதையில இந்தியா பயணிச்சு வருது.

இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவு இல்லை

மேற்காசிய போர் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கவில்லை, இதை அனைவரும் புரிஞ்சிக்கணும், உலக அளவில இந்தியா மீது நம்பிக்கை அதிகரிச்சு இருக்கு. எல்லா சவால்களையும் இந்தியா வெற்றிகரமா சமாளிச்சு இருக்கு.

பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்

உலக அளவில பெரிய அளவில வளருகிற பொருளாதாரமா இந்திய தொடர்ந்து முதலிடத்தில இருக்க. இது தொடரும்.

எனவே இன்னிக்கு தொடங்குற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமா இருக்கணும், அனைத்து கருத்துக்களையும் அனைவரும் மதிக்கணும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

7 மசோதாக்கள் தாக்கல்

மழைக்​கால கூட்​டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13ம் தேதி வரை நடக்க உள்​ளது. நாட்​டில் உயர்​கல்​வியை நிர்​வகிக்க தனித்​தனியே செயல்​படும் யுஜிசி, ஏஐசிடிஇ, தேசிய ஆசிரியர் கல்விக் குழு​மம் ஆகிய​வற்றை கலைத்​து​விட்​டு, ‘இந்​திய உயர்​கல்வி ஆணை​யம்’ அமைக்க வகை செய்​யும் ‘விக்​சித் பாரத் சிக்‌ஷா அதிஷ்​டான்’ மசோதா.

வெளி​நாட்டு பங்​களிப்பு ஒழுங்​கு​முறை திருத்த மசோதா ஆகியவை ஏற்​கெனவே நிலு​வை​யில் உள்​ளன. அவற்றை இந்த கூட்​டத்​தொடரில் மீண்​டும் அறி​முகம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

வரு​மான வரி, உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எண்​ணிக்​கை, பிறப்பு - இறப்பு பதிவு, குறு, சிறுதொழில் மேம்​பாடு தொடர்​பான திருத்த மசோ​தாக்​கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

‘வந்​தே ​மாதரம் பாடலை அவம​தித்​தால் 3 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க வகை செய்​யும் தேசிய கவுரவ திருத்த மசோதா ஆகிய​வற்​றை தாக்​கல் செய்யவும் மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

மகளிர் இட ஒதுக்கீடு தாக்கலா?

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற பட்​ஜெட் தொடரில் மகளிர் இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​கான மசோ​தாக்​கள் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன. மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்​காத​தால் மசோ​தாக்​கள் தோல்வி அடைந்​தன.

இந்த மசோதாக்களை மழைக்​கால கூட்​டத் தொடரின்போது மக்​களவை​யில் மீண்டும் தாக்​கல் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

பிரதமர், முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் ஆகியோர் குற்ற வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்டு 30 நாட்​களுக்கு மேல் சிறை​யில் இருந்​தால் அவர்​களை பதவி நீக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்ற மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

‘உறுப்​பினர் பதவிக்கு பாதிப்பு இல்​லாமல் தற்​காலிக​மாக பதவி நீக்​கம் செய்​ய​லாம். நீதி​மன்​றத்​தால் நிரப​ராதி என விடு​தலை செய்​யப்​பட்​டால் மீண்​டும் பதவி​யேற்​றுக் கொள்​ளும் வகை​யில் மாற்​றங்​களை செய்​ய​லாம்’ என்று கூட்​டுக்​குழு பரிந்​துரைத்த​தாக கூறப்​படு​கிறது.

இந்த மசோ​தாவை கடுமை​யாக எதிர்க்க எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்​ளன.

மக்களவையில் என்டிஏ பலம் 319

மக்களவையில் 540 எம்.பி.க்கள் உள்ளனர். மசோதாக்களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸின் 20 எம்.பி.க்கள், சிவசேனாவின் உத்தவ் அணியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் சமீபத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இதனால், மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக உயர்ந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் சரத்பவார் அணி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in