பொதுதேர்வு திருத்தம், வந்தே மாதரம் சட்ட திருத்த மசோதாக்கள்;குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்..

இந்த புதிய சட்ட திருத்த மசோதாவின் படி தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை உட்பட ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் வகையில் மசோதாவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Public examination irregularities 'Vande Mataram' legislative amendment bills passed  Parliament via voice vote
Public examination irregularities 'Vande Mataram' legislative amendment bills passed Parliament via voice votegoogle
2 min read

பொது தேர்வு திருத்த மசோதா தாக்கல் நிறைவேற்ற்ம்

பொது தேர்வில் ஏற்படும் முறைக்கேடுகள் மற்றும் , கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களை வழங்கும் பொது தேர்வு முறைகேடு மசோதாவானது குரல் வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் சட்ட திருத்த மசோதா

தேசிய கீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பைப் போலவே, 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு எடுத்தது.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் செய்யப்பட்டு குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதாவனது தாக்கல் செய்யப்பட்டுள்ளது

வந்தே மாதரததை அவமதித்தால் மசோதா கூறும் தண்டனை என்ன

இந்த புதிய சட்டதிருத்த மசோதாவின் படி , கீதத்திற்கு இணையாக வந்தே மாதரம் பாடலும் கருதப்படும். அதை பாடாமல் தவிர்ப்பதும் குற்றமாகவே கருதப்படும்.

அவமதிப்பு செய்வோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.

எதிர்கட்சிகளின் அமளிக்கிடையே பொதுதேர்வு முறைகேடு மாசோதா நிறைவேற்றம்

எதிர்கட்சியினரின் தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் பொதுத் தேர்வு திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொது தேர்வு சட்ட திருத்த மசோதா, 10 ஆண்டுகள் சிறை , 10 கோடி வரை அபராதம்

இந்த புதிய பொது தேர்வு திருத்த மசோதாவை நாடளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த புதிய சட்ட திருத்த மசோதாவின் படி வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சிறைத்தண்டனை மற்றும்

அபராதங்களை இந்த மசோதா வழங்குகிறது. பொதுத் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.50 லட்சம் வரை அபராதமும், வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதியில் ஈடுபடுவோருக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிசெய்கிறது

மசோதாக்கள் தாக்கலும், எதிர்கட்சிகளின் விவாதமும்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக டெல்லிஜந்தர்மந்தரில் மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுவிற்கு எதிராக 35 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர் ,அப்போது கரப்பான் பூச்சி கட்சியினர் மற்றும் , பல ஆயிரக்கணக்கான் மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்,இதனால் போராட்ட காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே போராட்டமானது தீவிரமடைந்தது .

அப்போது மாணவர்கள் பலர் மீது டெல்லி காவல் துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது , இந்த நிலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு முன்வைத்தார், இதனால் நாடளுமன்றத்தில் கடும் கூச்சலும் அனல் பறக்கும் விவாதமும் நடைப்பெற்றது. இந்த கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தி இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவனது நிறைவேற்றம் செய்யப்பட்டது .

============================

logo
Thamizh Alai
www.thamizhalai.in