புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி என தீர்ப்பு.மே 5-ல் தண்டனை விவரம் அறிவிப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
Puducherry girl murder case: Verdict found guilty; sentencing details to be announced on May 5
Puducherry girl murder case: Verdict found guilty; sentencing details to be announced on May 5 google
1 min read

குற்றவாளி என தீர்ப்பு

புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது .குற்றத்திற்கான தண்டனை விவரம் வரும் மே 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது

வழக்கின் பின்னணி விவரம்

கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி ,முத்​தி​யால்​பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி வீட்​டின் அருகே விளை​யாடிக் கொண்​டிருந்​த​போது திடீரென மாயமா​னார்.

2 நாட்​களுக்​குப்பின் அருகே உள்ள வாய்க்​காலில் கை, கால்​கள் கட்​டப்​பட்டு போர்​வை​யால் சுற்​றப்​பட்​ட நிலையில், பிண​மாக மீட்​கப்​பட்​டார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த சம்பவம் தொடர்பாக முத்​தி​யால்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, அதே பகு​தி​யைச் சேர்ந்த கருணாஸ் (19), விவே​கானந்​தன் (59) ஆகியோரை போக்சோ வழக்​கில் கைது செய்​தனர். இவ்​வழக்கு தொடர்​பாக 540 பக்க குற்​றப்​பத்​திரி​கையை போலீ​ஸார் தாக்​கல் செய்திருந்தனர்

இன்று விசாரணைக்கு வந்த வழக்கு

இந்த குற்றம் தொடர்பாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த விவே​கானந்​தன் கடந்​த 2024 செப்​டம்​பரில் கழி​வறை​யில் தூக்​குப் போட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.

இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதி​மன்​றத்​தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. விசா​ரணை முடிந்த நிலை​யில் இன்று இந்த வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று குற்றாவளி என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் தண்டனை குறித்த விவரங்கள் வருகிற மே 5 ம் தேதி வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

தீர்ப்பு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞரின் கருத்து

அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் கூறியதாவது: பாலியல் நோக்கில் குழந்தை கடத்தல், குழந்தையை அடைத்து வைத்தல், கொலை செய்தல் ஆகிய பிரிவுகளிலும் தடயம் ஆதாரம் மறைத்து வைத்தல் மற்றும் போக்சோ சட்டம் 6-ன் கீழ் கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பாக பேசிய அவர்

கடந்த 2024 நவம்பரில் சாட்சி விசாரணை தொடங்கியது நிலையில் 54 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.குற்றம் சாட்டப்பட்ட விவேகானந்தன் தற்கொலை செய்ததால்

அவர் மீது இவ்வழக்கில் இருந்த எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் குற்றம் சாட்டப்பட்டோர் செல்போனில் ஆபாச வீடியோக்கள், உயிர் மாதிரிகள் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in