பூதகரமாக வெடித்துள்ள கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தாரில் நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கூறி 20 நாட்களுக்கும் மேலாக கரப்பான பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்,
கரப்பான் பூச்சியினரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்
சிஜேபி போராட்டம் ,ராகும் காந்தி ஆதரவு
நீட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிராக நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி , போராட்டதில் காவல் துறை தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் இருந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து சிஜேபி கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் கலந்துகொண்டும் கைகளை கட்டிக்கொண்டும் , பிரதமர் வீட்டின் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர் , போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர்களை காவல் துறை கைது செய்துள்ளது
மோடி அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லியில் பிரதம்ர் வீடு நோக்கி பேரணியில் ஈடுப்பட்டன், மேலும் பிரதமர் மோடியும் ,,உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவி விலக வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
தீவிரமடைந்திருக்கும் சிஜேபி போராட்டம்
20 நாட்களுக்கும் மேலாக தொடரும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்டிற்கு டெல்லி மட்டுமல்லாது , இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி ,பல்கலைக்கழக மாணவர்கள் , அரசியில் தலைவர்கள் , சமூக ஆரவலர்கள் என பல தரப்பிலும் இருந்து ஆதரவானது கிடைத்துள்ளது
மத்திய அரசிடம் முன்வைத்த சிஜேபி
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது நடைபெற்ற நிலையில் , நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாக சென்றனர்.
இந்த நிலையில் டெல்லி ஜந்தன் மந்தரில் பதற்றமான சூழலும் , காவல் துறை தடியடி நடத்தியும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் சிஜேபு கட்சியனரை தடுத்திருந்தனர்
போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் , கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
சிஜேபி கட்சியின் மூன்று முக்கிய கோரிக்கைகள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் மற்றும்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய கோரிக்கையை சிஜேபி கட்சி மத்திய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்துள்ளது
தொடர் உண்ணாவிரத போராட்டம், ஆதரவாக வாங்சுக்
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக ஜந்தன் மந்தரில் தொடர் போரட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் , இவர்களின் போரட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுங்க் ஆதரவாக் 2 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டு ஆதரவு அளித்தார்.
வழுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சோனம் வாங்சுக்
20 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதால சோனம் வாங்சுக்கின் உடல் எடையாந்து 8 கிலோ வரை குறைந்து உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ,
நீதிமன்ற உத்தரவின் ப்பெரில் போரட்டத்தில் இருந்து அவர் வழுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவம்னையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
மேலும் சிஜேபி கட்சியினரின் இந்த போராட்டத்தின் எதிரொலியால் மழக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் ஒத்துவைக்கப்பட்டுள்ளது
நீட் தேர்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் , நீட் தேர்வு முறைகேடுவிற்கு முற்றுபுள்ளி வைக்கப்படுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
========================
-