’கவுன்டரில் தட்கல் டிக்கெட்’ OTP அவசியம் : ஓரிரு நாளில் அறிமுகம்

OTP Mandatory for Tatkal Ticket Booking At Reservation Counters : கவுன்டரில் தட்கல் டிக்கெட் எடுக்கவும் ஓடிபியை அவசியமாக்கி இருக்கும் ரயில்வே நிர்வாகம், இதை அனைத்து ரயில்களுக்கும் அறிமுகம் செய்கிறது.
Railway Administration made OTP mandatory for buying Tatkal tickets at Reservation counter, for all trains
Railway Administration made OTP mandatory for buying Tatkal tickets at Reservation counter, for all trainsIRCTC
1 min read

தட்கல் முன்பதிவு - ஓடிபி அவசியம்

OTP Mandatory for Tatkal Ticket Booking At ReservationCounters : ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் எடுக்க பயணிகள் தங்கள் மொபைல் போனில் வரும் ஒரு முறை கடவுச்சொல்லை கொடுக்க வேண்டும். கடைசி நேர டிக்கெட் முன்பதிவு வசதியின் தவறான பயன்பாட்டை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சோதனை முறையில் அறிமுகம்

ஏற்கனவே, நவம்பர் 17ம் தேதி முதல் கவுன்டர்களில் முன்பதிவு செய்யப்படும் பயணங்களுக்கு ஓடிபி அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முறையை ரயில்வே அமைச்சகம் சோதனை அடிப்படையில் தொடங்கியது. முதலில் சில ரயில்களில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டது. பின்னர் இதன் எண்ணிக்கை 52 ரயில்களாக அதிகரிக்கப்பட்டது.

இது சிறப்பான பலனை கொடுத்து வருவதால், ஓரிரு நாட்களில் எல்லா ரயில்களுக்கும் கவுன்டர்களில் இந்த முன்பதிவு முறை அமல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாதாரண பயணிகளுக்கு பயன்

முக்கியமான காரணம் என்னவென்றால், சாதாரண பயனர்களுக்கு கடைசி நேர டிக்கெட் முன்பதிவு வசதியை மேலும் வசதியானதாக மாற்றவே ஓடிபி அடிப்படையிலான தட்கல் முன்பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஓடிபி சரிபார்த்த பிறகு டிக்கெட்

இந்த முறையின் கீழ், முன்பதிவு கவுன்டரில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முன்பதிவு படிவத்தில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பின்னரே டிக்கெட் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

தட்கல் வசதியின் தவறான பயன்பாட்டை தடுப்பதும், அதிக தேவை உள்ள டிக்கெட்டுகளுக்கு உண்மையான பயணிகள் பயணிப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

டிக்கெட் முறையில் வெளிப்படைத்தன்மை

ரயில்வே டிக்கெட் முறையில் வெளிப்படைத்தன்மை, பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இது சிறப்பான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை

கடந்த சில மாதங்களில், பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவுகளில் நியாயமான அணுகலை வழங்கவும், முன்பதிவு முகவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக இந்த முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் ரயில்வே அமைச்சகம் சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, முன்பதிவு தொடங்கிய பின் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ஒதுக்கப்பட்ட பொதுவான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.

----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in