எரி்பொருள் விநியோகத்தில் தளர்வு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக , பெட்ரோல், டீசல் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது
போர் எதிரொலி மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடு
ஈரான் அமெரிக்க இடையே தொடர்ந்து போர் நீடித்துவந்த , குறிப்பாக் ஹோர்மூஸ் நீரினயை ஈரான் மூடியிருந்தது இது உலகளவில் எரிப்பொருள் விநியோகத்திற்கு தட்டுபாடுகளை மத்திய அரசு விதித்திருந்த்து ,
இந்த நிலையில் ஈரான் அமெரிக்க இடையே ஒப்ந்த்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில் , ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறப்பதாக அறிவித்த்து ,இதனால் எரிப்பொருள் தட்டுப்பாட்டில் தடை தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் , இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு
ஈரான் போரை தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை நிர்வகிக்க வணிக மற்றும் தொழில்முறை நுகர்வோருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ஜூன் 12 முதல் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்து இருந்தது.
அந்த உத்தரவு அடிப்படையில் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், தொழில், வணிக மற்றும் நிறுவன நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
உலகளாவிய தட்டுப்பாடு காரணமாகவெ உள்ளூர் எரிபொருள் கட்டுப்பாடு
உலகளாவிய விநியோகத் தடைகளுக்கு மத்தியில் உள்ளூர் அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
கட்டுபாடுகளை தளர்த்திய மத்திய அரசு
தற்போது ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் கையெழுத்தாகியிருக்கும் நிலையில் , எரிபொருள் மீதான கட்டுபாடுகளுக்கு இனி அவசியம் இல்லை கூறி மத்திய அரசு கட்டுபாடுகளாஇ தளர்த்துவதாக தெரிவித்துள்ளது
ஜூலை 1 முதல் அமல்
2026 இன் பிரிவு 3-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு தனது ஜூன் 12 தேதியிட்ட உத்தரவை ஜூலை 1 முதல் திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்து உள்ளது. இந்த உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருள் மீதான விலை குறையுமா
கட்டுபாடுகளை மத்திய அரசு தளர்த்தியிருக்கும் நிலையில் எரிபொருள் மீதான விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
======================