பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டத்தை தீவிரப்படுத்திய ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதி​யம் தொடர்​பாக பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சருடன் நடை​பெற்ற பேச்சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​ப​டாத​தால், இடைநிலை ஆசிரியர்​கள் மீண்​டும் போராட்​டத்தை தொடங்கியுள்​ளனர்.
Secondary school teachers have resumed their strike after failing to reach an agreement with the Minister of Education regarding equal pay for equal work.
Secondary school teachers have resumed their strike after failing to reach an agreement with the Minister of Education regarding equal pay for equal work.
1 min read

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

Secondary school teachers have resumed their strike after failing to reach an agreement with the Minister of Education regarding equal pay for equal work : சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த மாதம் .26ம் தேதி முதல் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

போராட்​டத்​தின் தீவிரத்தை கட்​டுப்​படுத்த எஸ்​எஸ்​டிஏ பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் உள்​ளிட்ட தலைமை நிர்​வாகி​களை போலீ​ஸார் வீட்​டுக் காவலில் வைத்​தனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை​யும் உடனுக்​குடன் தேடி, தேடி கைது செய்​தனர். ஆனாலும் ஆசிரியர்​களின் போராட்​டம் தொடர்ந்​தது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு

இந்​நிலை​யில் எஸ்​எஸ்​டிஏ சங்க நிர்​வாகி​களு​டன் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் உள்ள அவரது முகாம் அலு​வல​கத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

தொடர்ந்து கல்​வித்​ துறை அலு​வலர்​களும், ஆசிரியர் சங்க நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இவ்​விரு பேச்​சு​வார்த்​தைகளும் சுமார் 7 மணி நேரம் நடை​பெற்​றது.

இதையடுத்து கோரிக்​கைகள் குறித்து முடி​வெடுக்க போராட்​டக் குழு​விடம் அதி​காரி​கள் சிறிது அவகாசம் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது.

சமவேலை, சம ஊதியம் அரசு கைவிரிப்பு

இதையடுத்து இடைநிலை ஆசிரியர்​கள் பொங்​கல் பண்​டிகை​ அன்று மட்​டும் போராட்​டத்​தில் ஈடு​பட​வில்​லை. இந்​நிலை​யில் கோரிக்​கையை நிறைவேற்​று​வது குறித்து எந்த பதி​லும் வரவில்லை எனக்​கூறி சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் இடைநிலை ஆசிரியர்​கள் மீண்​டும் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து வாக​னங்​களில் ஏற்​றினர்.

அப்​போது ஆசிரியர்​கள் காவல் துறை​யினர் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள் அரு​கில் இருந்த சமு​தாய நலக்​கூடத்​தில் அடைத்து வைத்து மாலை​யில்​ விடுவிக்​கப்​பட்​டனர்​.

திமுக கொடுத்த வாக்குறுதி

2021ம் ஆண்டு தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

தேர்தல் அறிக்கை 311-ல், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் வாக்குறுதி அளித்தது.

ஆனால் நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியானது இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in