இதர மாநிலங்களைப்போலவே மேற்குவங்கத்திலும் அமலப்டுத்தப்படும் ,முதல்வர்
இதர மாநிலங்களான குஜராத், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையைப் பின்பற்றி மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறும்போது
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி இது குறித்து கூறும்போது
“மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். இதற்கென ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அதை சட்டப்பேரவையில் நான் விளக்குவேன்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடமுறையை போன்று இங்கு கொண்டுவரப்படும் ,அது குறித்து விரைவில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
மம்தா பானர்ஜி அரசை சாடிய சுவேந்து அதிகாரி
தொடர்ந்து பேசிய சுவேந்து அதிகாரி ,மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய அரசில் ஊழலும், வாரிசு அரசியலும்தான் மேற்கு வங்கத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்டன என்று முந்தைய அரசையும் சாடினார்
வந்தே மாதரம் , தேசிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்கப்படும்
வந்தே மாதரம் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாடலின் 150வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தேசிய அளவிலான அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பது குறித்தான தகவல்களையும் பட்ஜெட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்
இதர மாநிலங்களை சுட்டிக்காட்டி சிவில் சட்டம்
நம் நாட்டில் பொது சிவில் சட்டம் தற்போது கோவா, உத்தராகண்ட், குஜராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் உள்ளது அல்லது சட்டமாக இயற்றப்பட்டுள்ளதாகவும் , அதனை கட்டமைக்க பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார் ,
==================