

மக்கள்தொகை கணக்கெடுப்பு
Citizens who fail to comply can face a penalty of up to ₹1,000 and, in cases of willful refusal or obstruction, up to 3 years of imprisonment :இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2021ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடைபெற்று இருக்க வேண்டும்.
இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு
ஆனால், கொரான பரவல் காரணமாக இந்த நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஒத்திவைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதலில் வீடுகள் கணக்கெடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும்.
அதன்படி, வீடுகளை பட்டியலிடும் பணி புதுச்சேரியில் தொடங்கியது.
3,000 ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கிறார்கள்.
தவறான தகவல் தரக்கூடாது
பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு தராமல், வேண்டுமென்றே தவறான தகவல்களை கொடுக்க கூடாது.
ஆயிரம் ரூபாய் வரை அபராதம்
அப்படி, தவறாக தகவல்களை அளித்தது, தெரிய வந்தால், 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
===============