வெற்றியை வசப்படுத்திய பாஜக
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்த வெற்றி மம்தாவின் நீண்ட ஆட்சியை முறியடித்துள்ளது.
மேற்குவங்க வெற்றி : பிரதமர் உரை
மேற்கு வங்க தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி கைவசப்படுத்தி பாஜக நீண்ட கால ஆண்டிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது .
வெற்றியை மாநிலத்தின் வரலாற்றில் அச்சமற்ற ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிப்பூர்வமாகக் உரையாற்றியுள்ளார்.
வெற்றியை கொண்டாடிய பிரதமர்
மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்றார்
அப்போது அவர் தொண்டர்களிடம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்
வெற்றி குறித்து உரையாற்றிய பிரதமர்
மேற்கு வங்க தேர்தல் வரலாற்று வெற்றியின் மூலம், கங்கோத்திரி முதல் கங்கா சாகர் வரை எங்கும் தாமரை மலர்ந்துள்ளதுள்ளதாகவும் .
15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ஜனநாயகமும், நமது அரசியலமைப்பும் மீண்டும் ஒருமுறை வென்றுள்ளது. இதற்கு, கட்சித் தலைவர் நிதின் நவீன் வழிகாட்டுதலும், தொண்டர்களின் அயராத உழைப்புமே காரணம்.
நிதின் நவீன் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே இந்த பிரம்மாண்ட வெற்றி பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பழி வாங்கும் அரசியலுக்குப் பதிலாகப் பண்பட்ட மாற்றத்துக்கான அரசியலே இங்கு முன்னிறுத்தப்பட வேண்டும்.
மேற்கு வங்கம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளன. குறிப்பாக, பாராமதி தொகுதியில் மகாராஷ்டிர துணை முதல்வர் சுனேத்ரா பவார் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்
வங்க மண்னில் புதிய அரசியல் ; பிரதமர் பெருமிதம்
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில், பல்வேறு சவால்களைக் கடந்து பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைத் தாண்டி 200-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி வங்க மண்ணில் புதிய அரசியல் வரலாற்றை எழுதியுள்ளது பாஜ எழுதியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார் பிரதமே மோடி.
அமித் ஷா வாழ்த்து
மேற்கு வங்கத்தில் 2 வாரங்களுக்கு மேலாக முகாமிட்டு தேர்தல் வியூகங்களை வகுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘இந்த வெற்றி வரலாற்று சாதனை’’ என்று புகழாரம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி ஊடுருவல்காரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது
என்றும் குறிப்பிட்டு உரையாற்றினார்.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்துள்ளது, இந்த வெற்றி மம்தாவின் நீண்ட ஆட்சியை முறியடித்துள்ளது.
==============