

தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு
Tirupati Laddu Issue Update in Tamil : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி (CBI SIT ) திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.
லட்டில் தரம் குறைந்த பொருட்கள்
மாறாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிறப்பு புலனாய்வு குழு
லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்க பட்ட விவகாரத்தில் அதனை விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
புலனாய்வு குழுவின் நடவடிக்கை
இந்த சிறப்பு புலனாய்வு குழு, இதுவரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரையும் நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஐ நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தியது. இதில் பல்வேறு பால் உற்பத்தி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். மேலும், ஏ-34 குற்றவாளியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரியான விஜயபாஸ்கர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் வாக்குமூலம்
புலனாய்வு குழுவுக்கு கொடுத்த வாக்கு மூலத்தில், “கலப்படம் செய்த நெய்யை பரிசோதனை செய்ததும் அதில் கலப்படம் உள்ளது என்பதை அறிந்தேன்.
இதனை அந்தந்த நிறுவனங்களுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள், எனக்கு லஞ்சம் கொடுத்து நெய்யை தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்தனர்.
இதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்சம், பிரீமியர் நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சமும் லஞ்சமாக வாங்கினேன்" என வாக்கு மூலம் அளித்தார்.
அமைகிறது விசாரணை குழு
இந்நிலையில் நேற்று அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை குழுவில் நடந்த கூட்டத்தில் கலப்பட நெய் விவகாரம் குறித்து சரிவர புலனாய்வு விசாரணை நடக்க வில்லை என்பதால், உண்மையான குற்றவாளி யார் என விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன் அமைக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையும் பெரும் பேசும் விவகாரமாவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .