கலப்பட நெய் லட்டு விவகாரம் : விசாரணை குழு அமைக்கும் ஆந்திர அரசு

Tirupati Laddu Issue Update : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), குற்றம் சாட்டப்பட்ட லட்டு விவகாரத்திற்கு விசாரணை கமிஷன் அமைகிறது ஆந்திர அரசு
Andhra Pradesh Government Form Investigation Commission For Adulteration Ghee At Tirupati Laddu Issue Update in Tamil
Andhra Pradesh Government Form Investigation Commission For Adulteration Ghee At Tirupati Laddu Issue Update in TamilSource : SVBC TTD TV
1 min read

தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு

Tirupati Laddu Issue Update in Tamil : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி (CBI SIT ) திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

லட்டில் தரம் குறைந்த பொருட்கள்

மாறாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிறப்பு புல​னாய்வு குழு

லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்க பட்ட விவகாரத்தில் அதனை விசாரணை செய்ய சிறப்பு புல​னாய்வு குழுவை அமைக்க வேண்டும் என ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸார் உச்ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்வு குழு அமைக்கப்பட்​டது.

புல​னாய்வு குழுவின் நடவடிக்கை

இந்த சிறப்பு புல​னாய்வு குழு, இது​வரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்​கள் அனை​வரை​யும் நெல்​லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்​றும் சிபிஐ நீதி​மன்​றங்​களில் ஆஜர் படுத்​தி​யது. இதில் பல்​வேறு பால் உற்​பத்தி நிறு​வனத்தை சேர்ந்​தவர்​கள் உள்​ளனர். மேலும், ஏ-34 குற்​ற​வாளி​யாக திருப்​பதி தேவஸ்​தான அதிகாரியான விஜய​பாஸ்​கர் ரெட்டி கைது செய்​யப்​பட்​டார்.

திருப்​பதி தேவஸ்​தான அதிகாரியின் வாக்குமூலம்

புல​னாய்வு குழு​வுக்கு கொடுத்த வாக்​கு மூலத்தில், “கலப்​படம் செய்த நெய்யை பரிசோதனை செய்​ததும் அதில் கலப்​படம் உள்​ளது என்​பதை அறிந்​தேன்.

இதனை அந்​தந்த நிறு​வனங்​களுக்கு எடுத்​துக் கூறினேன். ஆனால், அவர்​கள், எனக்கு லஞ்​சம் கொடுத்து நெய்யை தொடர்ச்​சி​யாக விநி​யோகம் செய்து வந்​தனர்.

இதன் மூலம் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்​பட்​டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்​சம், பிரீமியர் நிறு​வனத்​தில் இருந்து ரூ.8 லட்​ச​மும் லஞ்​ச​மாக வாங்​கினேன்" என வாக்​கு மூலம் அளித்​தார்.

அமைகிறது விசாரணை குழு

இந்நிலையில் நேற்று அமராவ​தி​யில் முதல்வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்சரவை குழு​வில் நடந்த கூட்டத்தில் கலப்பட நெய் விவ​காரம் குறித்து சரிவர புல​னாய்வு விசா​ரணை நடக்க வில்லை என்​ப​தால், உண்​மை​யான குற்​ற​வாளி யார் என விசா​ரிக்க விரை​வில் விசா​ரணை கமிஷன் அமைக்​க ஒரு​ மன​தாக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையும் பெரும் பேசும் விவகாரமாவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in