சித்திரை தேரோட்டத்தால் குலுங்கிய மதுரை! : நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை நடைபெற உள்ளதால், மதுரையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Madurai reverberates with the Chariot Festival following the divine wedding of Meenakshi and Sundareshwarar!
Madurai reverberates with the Chariot Festival following the divine wedding of Meenakshi and Sundareshwarar! source:Ai Generated
1 min read

Madurai reverberates with the Chariot Festival following the divine wedding of Meenakshi and Sundareshwarar! Tomorrow, Kallazhagar descends into the Vaigai River!

மதுரை சித்திரைத் திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, அதன் சிகர நிகழ்ச்சியை எட்டியுள்ளது.

தேரோட்ட வைபவம்

நேற்று நடைபெற்ற தெய்வீகத் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, இன்று காலை மதுரையே விழாக்கோலம் பூணும் வகையில் தேரோட்ட வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பக்திப் பரவசத்தில் ஆழ்த்திய திருக்கல்யாணம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது.

35 லட்ச மதிப்பீட்டில் 10 டன் மலர்கள்

இதற்காகக் கோவில் வளாகத்தில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில், சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 டன் எடையுள்ள வண்ணமயமான நறுமணப் பூக்களால் பிரம்மாண்ட மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாங்கல்ய தாரணம்

நேற்று ( 28-04-2026) காலை 8.54 மணிக்கு, மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் அதிர மீனாட்சி அம்மனுக்குத் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

இந்தத் தெய்வீக நிகழ்வைக் காணக் கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மங்கல நாண் மாற்றுதல்

அம்மனுக்குத் தாலி கட்டிய அந்தப் புனிதமான நேரத்தில், அங்கிருந்த சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டனர். மேலும், பல பெண்கள் பழைய மங்கல நாணை மாற்றி புதிய நாண் அணிந்து கொண்டனர்.

மாசி வீதிகளில் தேரோட்டம்

மீனாட்சி - சுந்தரரேஷ்வரர் திருக்கல்யாணத்தை அடுத்து, இன்று அதிகாலை மதுரையில் மாபெரும் தேரோட்டம் நடைபெற்றது.

பக்தி கோஷங்களுடன் உலா வந்த அம்மன்

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மற்றுமொரு தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நான்கு மாசி வீதிகளில் உலா

"ஹர ஹர சங்கர.. சிவ சிவ சங்கர.." என்ற பக்தி கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பெரிய தேர் நான்கு மாசி வீதிகளிலும் கம்பீரமாக உலா வந்தது.

நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

சித்திரை திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நாளை (30-04-2026)நடைபெற உள்ளதால், மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in