திருப்பதி லட்டு விவகாரம் : 36 பேர் மீது குற்றப்பத்திரிக்கை!

Tirupati Tirumala Laddu Case Update : திருப்பதி லட்டு விவகாரத்தில் 250 கோடி ஊழல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட 36 நபர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
Tirupati Laddu adulteration case Update CBI Says No Animal fat in ghee in final chargesheet 36 named accused list News in Tamil
Tirupati Laddu adulteration case Update CBI Says No Animal fat in ghee in final chargesheet 36 named accused list News in TamilSource : TTD
1 min read

திருப்பதி லட்டு விவகாரத்தில் 250 கோடி ஊழல் உறுதி

Tirupati Tirumala Laddu Case Update : திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டஊழலில், தேவஸ்தான அதிகாரிகள், பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் ரூ.250 கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

36 மீது குற்றச்சாட்டு

ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் வழங்கும் லட்டு தயாரிப்பில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆய்விலும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடந்து வந்தது.

இந்த குழு நெல்லூர் நீதிமன்றத்தில் 223 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர், 5 பால் பண்ணை நிபுணர்கள் உட்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது

லட்டு தயாரிப்பதற்கு பாமாயில், எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டு உள்ளது.

மண்ம் மற்றும் நிறத்திற்காக அசிட்டிக், லாக்டிக் அமிலம் மற்றும் செயற்கை திரவியங்கள் கலப்படம் செய்யப்பட்டு உள்ளது.

உ.பி, மஹாராஷ்டிரா, திருப்பதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து ஒட்டுமொத்தமாக 6 ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கலப்பட நெய்க்கு தரச் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.

குற்றப்பத்திரிகை பரபரப்பு தகவல்கள்

விஜயவாடாவைச் சேர்ந்த பாரத் பாய் தாக்கூர் மூலம் ரூ.12.55 கோடி ரொக்கமும், சென்னையில் மதரம் தேவாசி மூலம் ரூ.7.31 கோடியும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

லட்டில் விலங்கு கொழுப்பு

திருப்பதி லட்டு தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானத்திற்கு தரிசனம் செல்பவர்கள், லட்டு வாங்குவதற்கே அச்சம் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, இதன் உறுதிகரமான தீர்ப்பு வெளிவரும் வரை இத்தகைய சூழல் நிலவும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதே நிதர்சணமான உண்மை.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in