டிஎன்பிஎல் கிரிக்கெட் ஆகஸ்ட 4 முதல் ஆரம்பம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நடத்தும் ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் 4 முதல்நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
10வது ஆண்டாக நடக்கும் போட்டியில் 8 அணிகள் பங்கேற்பு
தொடர்ந்து 10-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்டம் குறித்த அறிவிப்புகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி இந்த சீசனின் முதல்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கலிலும், இறுதிக்கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
திண்டுக்கல்லில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்றும், சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்டுகளுக்கு(லோயர்) ரூ.100 என்றும், சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்டுகளுக்கு(அப்பர்) ரூ.150 என்றும், கேஎம்கே டெரஸ் பகுதிக்கு ரூ.300கேஎம்கே லோயர் பகுதிக்கு ரூ.500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் தொடர் வீரர்கள் ,ஐபிஎல் அணியில் ப்ங்கேற்பு
குறிப்பாக டிஎன்பிஎல் தொடர் மூலம் ஆடிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், வருண் சக்கவர்த்தி ஆகியோர் இந்திய அணியிலும், ஷாரூக் கான், குர்ஜப்நீத்சிங்,
சித்தார்த், அம்பரீஷ் ஐபிஎல் அணிகளிலும் ஆடி வருகின்றனர். வீரர்கள் ஏலத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் சார்பில் அஸ்வந்த் வல்தாபா அதிகபட்சமாக ரூ.14.45 லட்சத்துக்கும், நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் யு முகிலேஷ் ரூ.13.7 லட்சததுக்கும் வாங்கப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது
===========================