

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா இதழின் ஆசிரியர் கல்யாண சுந்தரம் தான கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நான் பேசுவதற்கு முன்னாள் 5 நிமிடங்கள் ஷாநவாஸ் பேசினார். பிறகு எனக்கு 5 நிமிடங்கள் வழங்கப்பட்டதாக நெறியாளர் சொல்கிறார். அதில் 2 நிமிடங்களுக்கு மேலாக அவர்தான் பேசிக் கொண்டு இருக்கிறார். திமுகவிற்கு சாமரம் வீசுவதுதான் உங்கள் ஊடகப்பணியா?
திமுக குறித்து, செந்தில்பாலாஜி, ஆகாஷ் பாஸ்கரன், ரத்திஷ், ஜுஜு உதயநிதி குறித்தெல்லாம் பேச தொடங்கினாலே நெறியாளர்கள் பதறுவது ஏன் ?
நீங்கள் எத்தனை தகிடுதத்தம் போட்டாலும் என்னை அழைக்க நீங்கள்தான் அஞ்சி நடுங்குகிறீர்களே ஒழிய உங்களை எதிர்கொள்ள நான் தயங்குவதில்லை.
இவ்வாறு அந்தப்பதிவில் கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.