போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் : AITUC, CITU...

Transport Employees Pension Scheme : ‘உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை போக்குவரத்து கழகத் தொழிலா​ளர்​களுக்​கும் அமல்​படுத்த வேண்​டும்’ என ஏஐடி​யுசி மற்​றும் சிஐடியு வலி​யுறுத்​தி உள்​ளன.
AITUC, CITU stressed guaranteed retirement scheme should be implemented for transport corporation workers also
AITUC, CITU stressed guaranteed retirement scheme should be implemented for transport corporation workers alsoGoogle
1 min read

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்

AITUC, CITU on Transport Corporation Employees Pension Scheme : அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது எப்போது முதல் செயல்படுத்தப்படும், அரசாணை எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.

அதிமுக ஆட்சியில்...

இந்தநிலையில், ஏஐடி​யுசி பொதுச்​செய​லா​ளர் ஆறு​முகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அதி​முக ஆட்​சி​யில் 2003 ஏப்​ரல் மாதத்​துக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்த தொழிலா​ளர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம்​தான் பொருந்​தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலா​ளர்​களுக்​குப் பொருந்​தாத ஒரு திட்​டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்கள் வஞ்சிப்பு

ஊதிய ஒப்​பந்​தங்​களின்​படி உரு​வான ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அரசாணை மூலம் தடுக்க முடி​யாது என தொடர்ந்து ஏஐடி​யுசி உள்​ளிட்ட அமைப்​பு​கள் குரல் கொடுத்து போராடி வந்​தன. அதைத்​தொடர்ந்​து, 2008ல் சீரமைப்பு குழு திமுக அரசின்​போது போடப்​பட்​டது. அதில் ஏஐடி​யுசி வலு​வான வாதங்​களை முன்​வைத்​தது.

தமிழக அரசு உறுதியளித்தது

சீரமைப்பு குழு​வினுடைய பரிந்​துரை​யில் மக்​கள் நல சேவை​யில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​களுக்கு அரசே பொறுப்பு ஏற்று ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என பரிந்​துரைத்​தது. பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் அரசின் பரிசீலனைக்கு பின்பு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​ட​மாக மாற்​றப்​படும் என ஊதிய ஒப்​பந்த சரத்​துகளில் உறுதி அளிக்​கப்​பட்​டது.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டம்

இந்​நிலை​யில் அரசுப் பணி​யாளர்​களுக்​கான உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளதை ஏஐடி​யுசி வரவேற்​கிறது. அதே​போல், அரசு போக்குவரத்து கழக தொழிலா​ளர்​களுக்கு அதி​முக அரசால் நிறுத்​தப்​பட்​டுள்ள பழைய ஓய்​வூ​தி​யம் மீண்​டும் வழங்​கப்​படும் என்ற திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தியை அரசு போக்​கு​வரத்து கழக தொழிலா​ளர்​களுக்​கும் செயல்​படுத்த வேண்​டும்.

அரசு போக்குவரத்துக் கழகத்​தில் நிர்​வாக பங்​களிப்​புத் தொகை 12 சதவீதத்தை எடுத்​துக்​கொண்டு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் ஆறுமகம் வலியுறுத்தி உள்ளார்.

ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்க

சிஐடியு பொதுச்​செய​லா​ளர் ஆறு​முக நயி​னார் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அரசு ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​துக்​குப் பதிலாக உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை தமிழக அரசு அறி​வித்​துள்ள நிலை​யில், 202-ம் ஆண்டு ஏப்​ரலுக்கு பின் பணி​யில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்​களுக்கு புதிய ஓய்​வூ​தி​யத் ​திட்​டம் அமுல்​படுத்​தப்​படும் என்று அரசு வெளி​யிட்ட அரசாணையை வாபஸ் பெற்​று, 2023 ஏப்​ரலுக்கு பின் பணி​யில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம் கிடைப்​பதை அரசு உறு​திப்​படுத்த வேண்​டும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்துக

போக்குவரத்து ஊழியர்​களின் ஓய்​வூ​தி​யத் ​திட்​டம், வருங்​கால வைப்​பு நிதி திட்​டத்துக்​குப் பதிலாக உரு​வாக்​கப்​பட்​டது. எனவே, தற்​போது அரசு அறி​வித்​துள்ள உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை மேம்​படுத்தி போக்குவரத்து ஊழியர்​களுக்கும் அமலாக்​க வேண்​டும்​” என்​று கேட்டுக் கொண்டுள்ளார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in