நெல் கொள்முதலுக்கு கிடங்குகள் தேவை, கடித நாடகம் அல்ல : அண்ணாமலை

Annamalai on Paddy Farmers : நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு பாதுகாப்பான கிடங்குகள் தானே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று அண்ணாமலை கண்டித்துள்ளார்.
Annamalai condemned DMK's letter-writing drama, saying permanent solution to protecting paddy bundles from rain is secure warehouses
Annamalai condemned DMK's letter-writing drama, saying permanent solution to protecting paddy bundles from rain is secure warehouses
1 min read

நெல்லுக்கான ஈரப்பதம் - கடிதம்

Annamalai on Paddy Farmers : நெல்லுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி

இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

”தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

எங்கே போனது ரூ.309 கோடி?

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ரூ.309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ரூ.309 கோடி நிதி?

ரூ.160 கோடி ஊழலா?

நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ரூ.160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30-40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.

நெல் கொள்முதல் தாமதம் - அலட்சியம்

ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுது போக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?

துன்பத்தில் தமிழக விவசாயிகள்

திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல.

தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த திமுக அரசு?” என்று அந்த பதிவில் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in