நடைமுறைக்கு வந்தது அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு : விரைவில் விரிவாக்கம்...!

தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் முறையில் வரு​கைப்​ப​திவு முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது
Biometric attendance system for government employees implemented, decision to expand soon
Biometric attendance system for government employees implemented, decision to expand soon google
1 min read

பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு

தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் முறையில் வரு​கைப்​ப​திவானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

கட்டாயாமான பயோமெட்ரிக் வருகை பதிவு

தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் ,சென்னை புனித தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் மற்றும் நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தில் 54 துறை செயலர்​கள்,

பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​கள் என 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்​றிவரு​கின்​றனர்.இவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தபட்டுள்ளது

உழியர்கள் இந்த புதிய பயன்பாட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

இந்த பயோமெட்​ரிக் மற்​றும் முகம் காணும் தொடு​திரை இயந்​திரம் அலு​வலக முகப்​பில் நிறு​வப்​பட்​டுள்​ளது ,இதில் துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை பதிவுசெய்ய பயோமெட்​ரிக் முறையை கடைப்​பிடிக்க வேண்​டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

வருகையை பதிவு செய்த உழியர்கள்

அதன்​படி, காலை வழக்​கம்​போல் அலு​வல​கம் வருகை தந்த மனித வளத்​துறை பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை புதிய நடை​முறை​யின்​படி வருகை பதிவினை டிஜிடல் முறையிலான பயோமெட்ரிக் முறையிக் பதிவு செய்தனர்

விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

இந்த பயோமெட்​ரிக் வரு​கைப்​ப​திவு திட்​டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆட்​சி​யில் பயோமெட்​ரிக் முறை அமலான போது தலை​மைச் செயலக பணி​யாளர் சங்​கம் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் அந்த உத்​தரவு திரும்​பப் பெறப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in