சென்னைக்கு குட் நியூஸ்,குடிநீர் தட்டுப்பாடு இல்லை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 6 டிஎம்சிக்கு மேல் குடிநீர் இருப்பு இருப்பதாகவும் , இதானல் , 6 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாட வாய்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே எழுந்த அச்சம்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தள்ளிபோகும் நிலை எல்நினோ எனப்படும் காலநிலை மாற்றம் காரணமாகவும் கடுமையான வெப்பம் ஏற்படும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது , இந்த நிலையில் தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே இருந்து வந்தது
6 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது ,அதிகாரிகள் தெரிவிப்பு
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 6 டிஎம்சிக்கு மேல் குடிநீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு, ஒரு மாதம் விநியோகிக்க 1 டிஎம்சி நீர் தேவை.
அதனால் இப்போது உள்ள குடிநீரை 6 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெர்வித்துள்ளது , இதனால் குடிநீர் தேவைக்கான தட்டுப்பாடு ஏர்படாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னையில் குடிநீர் ஆதரமாக இருப்பவை
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வழங்களான பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம்,
வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளவு 13,222 மில்லியன் கனஅடி இருப்பதாகவும்
நீர் இருப்பு விவரம்
கடந்த ஆண்டு இதே தேதியில் 7,670 மில்லியன் கனஅடி இருந்தது. கடந்த ஆண்டை விட இப்போது 1,531 மில்லியன் கன அடி குறைவாக இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
====================================