

மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தொறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதன் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.
ஜூன் 12 தண்ணீர் திறக்கப்படவில்லை
இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலத்தடி நீரை கொண்டு ஒரு சில பகுதிகளில் மட்டும் சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேட்டூர் நீர்மட்டம் 90 அடி
கர்நாடாகவில் பெய்த தொடர் மழையால், உபரி நீர் திறந்து விடப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டி உள்ளது. இன்று காலை நிலவரப்படி, 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே, சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
மேட்டூர் வரும் முதல்வர் விஜய்
தண்ணீரை திறந்து விட முதல்வர் விஜய் மேட்டூர் அணைக்கு நாளை வருகை தருகிறார். எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போதும், மேட்டூருக்கு நேரில் வந்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடனர்.
நாளை தண்ணீரை திறந்து விடுகிறார்
அதேபோன்று, முதல்வர் விஜயும் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு செல்கிறார்.
தொடர்ந்து, அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைக்கிறார். இதையொட்டி, அணை பகுதியில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர்
முதல்வர் வரும் வழிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், முக்கியச் சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் மேட்டூர் நகரப் பகுதிகளில் இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார்
முதல்வர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றங்கள், வாகன நிறுத்துமிடங்கள், காவல் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஜிபி தலைமையில் ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள் உள்ளிட்ட 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது. குடிநீருக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 90.47 அடியாகவும், நீர்இருப்பு 53.19 டிஎம்சியாகவும் இருக்கிறது.
================