திமுக கூட்டணியில் காங்கிரஸின் 28 தொகுதியில், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்காததன் காரணம் என்ன?

Congress : திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்த நிலையில் , மேலும் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
Why did the Congress withhold its candidate for the Melur constituency without announcing it?
Why did the Congress withhold its candidate for the Melur constituency without announcing it?google
1 min read

மேலூர் தொகுதி _அறிவிக்கப்படாத வேட்பாளர்

Congress Candidates List 2026 : திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிக்கான வேட்பாளர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்த நிலையில் , மேலும் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது

மதுரை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகுதி

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது . இதில் உசிலம்பட்டிக்கு வேட் பாளராக டி.சரவணக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார் ,ஆனால் மேலூர் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை

வேட்பாளர் அறிவிக்கப்படாததன் காரணம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதியில் மேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது ,காரணம் உள்ளூர்க்காரரா, வெளியூர்க்காரரா என்ற போட்டி நிலவுவதால், வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேட்பாளர் பெயர் அறிவிப்பு நிறுத்தி வாய்ப்பு

இந்நிலையில் தற்போது மேலூர் தொகுதிக்கு உள்ளூரைச் சேர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைத் துறை மாநிலத் தலைவர் மகாத்மா சீனிவாசன் என்பவரும்,

சிவகங்கை அருகே பச்சேரியைச் சேர்ந்த சி.ஆர்.சுந்தர்ராஜன் உட்பட சிலர் வேட்பாளராக கடும் போட்டியில் உள்ளதால், மேலூர் தொகுதிக்கு வேட்பளர் பெயர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in