

இடதுசரி அமைப்புகள் மீது தொடரும் நடவடிக்கைகள் :
தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் வெளியிட்டதாகக் கூறப்படும் சுற்றறிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயலாளர் பி.சண்முகம், முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல் :
மேலும், இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்படும் தலைமைச் செயலாளர் சாய் குமாரை பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு அதிகாரிகள் அரசின் கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் தவிர, அரசியல் சார்ந்த சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், இதுகுறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் மீது கடும் சாடல் :
அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறதா என்பதை முதல்வர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பி.சண்முகத்தின் இந்தக் கடிதம் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் மற்றும் அரசு தரப்பில் என்ன பதில் வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை:
ஆனால் உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்வது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவே வலியுறுத்துகிறோம்.
இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பொறுப்பான பதிலும் சொல்லப்படவில்லை எனவும் கடுமையான குற்றச்சாட்டுகள் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.