அதிமுகவிற்குள் ஏற்ப்பட்ட கட்சி பிளவு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. விசிக , கம்யூனிஸ்ட கட்சிகள் ஆதரவு கொடுக்க தவெக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது
தவெக அதரவு வழங்கிய அதிமுக எம்எல்ஏக்கள்
சட்டபேரவையில் அதிமுக பொதுசெயலாளர் பழனிசாமியின் உத்தரவை மீறி , அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இது அதிமுகவினரிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது
பதவவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு
தவெகவிற்கு ஆதரவு வழங்கிய எம்எல்ஏக்களின் பதவி பொறுப்புகளிலிருந்து நீக்கு அதரடியாக செய்பட்டார் மேலும் அவரகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவைத்தலைவரிடம் மனு அளித்திருந்தார்
மீண்டும் பதவி வழங்கிய எடப்பாடி
தலைமை நிலையச் செயலாளராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் அ.அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன்,
ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள்
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினமா செய்தது அத்தொகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ,
பாஜாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை , உங்களை வெற்றி பெற செய்த் மக்களுக்கு நீங்கள் நன்றி கூறியே ஆக வேண்டும் , இது முற்றிலும் தவறான செயல்பாடு என்று விமர்சனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்கள்
தங்களின் பதவியை ராஜினாம செய்தஅதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் , பேரவை தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கி தவெகவில் இணைந்தனர்
சி. விஜயபாஸ்கர் ராஜினாமா
அதிமுகவில் சிவி சண்முகத்திற்கு ஆதர்வாக இருந்த விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். 29ம் தேதி தவெகவில் இணைகிறார்.
விராலிமலை புதிய நிர்வாகிகள் நியமிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ள நிலையில், அம்மாவட்டத்தில் பெரும்பாலான கட்சி பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
=====================