திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் : எடப்பாடி பழனிசாமி சபதம்

Edappadi Palanisamy Slams DMK Government : தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை ஓயமாட்டேன் என்று, எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy Slams DMK Government in Election Campaign
Edappadi Palanisamy Slams DMK Government in Election Campaignhttps://x.com/EPSTamilNadu
1 min read

மக்களுடன் சந்திப்பு, மகிழ்ச்சி :

Edappadi Palanisamy Slams DMK Government : இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கையில், 'மக்​களைக் காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்' என்ற பயணத்தில் சுமார் 18.5 லட்​சம் மக்​களை நேரடி​யாக சந்​தித்​திருக்​கிறேன். அவர்​களைப் பார்த்​து, அவர்​களின் குறை​களைக் கேட்​டு, அவர்​களின் மனநிலையை அறிந்​தேன். பொது​மக்​கள் அனை​வருமே ஸ்டா​லினின் மக்கள் விரோத ஆட்​சி​யில், அவர்​கள் சந்​தித்து வரும் வேதனை​களை எடுத்​துரைத்​தனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை :

இந்த ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகளுக்​குப் பாது​காப்​பில்​லை. பாலியல் வன்​கொடுமை​கள் அதி​கரித்​துக்​கொண்டே போகிறது. இந்த ஆட்சிக்கு குற்​றங்​களை கட்​டுப்​படுத்​தத் தெரிய​வில்​லை. மக்​களே மக்​களை பாது​காத்​துக் கொள்​ளும் அவல​மான ஆட்சி நடக்​கிறது. காவல்​துறை​யினருக்கே பாது​காப்​பில்​லை. திமுக ஆட்​சி​யின்​மீது வெறுப்​பிலும், கடும் கோபத்​தி​லும் உள்​ளனர்.

அதிமுக ஆட்சியே மக்கள் விருப்பம் :

அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வர வேண்​டும். இந்த மோச​மான தீய ஆட்​சிக்கு முடிவு​கட்டி நல்​லாட்​சி​யைத் தர வேண்​டும் என என்​னைச் சந்​தித்த அனை​வரும் கேட்​டுக்​ கொண்​டனர். தாலிக்​குத் தங்​கம் திட்​டத்தை தாய்​மார்​களும், பெண்​களும், அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் மீண்​டும் செயல்​படுத்​தக் கேட்​டுக்​கொண்​டனர். அதனுடன் பட்​டுச் சேலை வழங்​கப்​படும் என்ற மங்​களகர​மான அறி​விப்​பை​யும் வெளி​யிட்​டேன்.

உரிமைத்தொகை - மகளிர் கோபம் :

மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​தை(Magalir Urimai Thogai), ஆட்​சி​யின் பாதிக் காலத்தை தாண்​டிய பிறகு கொடுத்​தாக தாய்​மார்​கள் கோபத்​துடன் கூறு​வதை எனது பயணத்​தில் கண்​டேன். அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் தொகை அதி​கரிக்​கப்​படும் என்ற அறி​விப்​பால் தாய்மார்கள் அகம் மகிழ்ந்​தனர்.

அதி​முக சார்​பில் 'தி​முக​வின் உருட்​டு​களும் திருட்​டு​களும், உண்​மைக்​காக உரிமைக்​காக' என்ற புதிய பிரச்​சார திட்​டத்தை தொடங்கி இருக்​கிறோம்.

திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் :

பொய்​யான வாக்​குறு​தி​களை​யும், திறனற்ற ஆட்​சி​யை​யும் கண்​டு, தமிழக மக்​களின் உள்​ளம் திமுகவை வீட்​டுக்கு அனுப்ப ஒன்​று​பட்​டு​விட்​டது. அதற்​கான நாட்​களை​யும் எண்​ணிக் கொண்​டிருக்​கின்​றார்​கள். வானளா​விய வெற்​றி​பெற்ற எனது எழுச்​சிப் பயணம் தொடரும். தமிழக மக்​களுக்கு நிம்​ம​தி​யான நல்​லாட்​சியை வழங்​கும்​வரை நான் ஓயப்​போவ​தில்​லை. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in