’கோடிகளில்’ திமுக அரசின் ஊழல் - காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்

ED : தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உள்ள 2,538 பதவிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இருந்து கோடிகளில் கையூட்டு பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
Enforcement Directorate Letter To TN Police to Major Money for Jobs Scam in MAWS Department Check ED Notice Full Details in Tamil
Enforcement Directorate Letter To TN Police to Major Money for Jobs Scam in MAWS Department Check ED Notice Full Details in TamilImage Courtesy : Enforcement Directorate Logo with Tamil Nadu Police
2 min read

அமலாக்கத்துறை கடிதம்

ED Letter To TN Police on Job Scam : இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) திங்கள் கிழமையன்று தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உள்ள 2,538 பதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதில் ‘வேலைக்குக் காசு’ என்ற அடிப்படையில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.இந்தப் பதவிகளுக்கான நியமன ஆணைகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை

பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act – PMLA) பிரிவு 66(2)-இன் கீழ், தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கு (HoPF) அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், அமலாக்கத்துறை பின்வருமாறு தெரிவித்துள்ளது:

ஒவ்வொருமிடமிருந்து லட்சங்களில் லஞ்சம்

2024-இன் நடுப்பகுதியில் நடந்த தேர்வு நடைமுறையில் மோசடி செய்யவும், குறைந்தபட்சம் 150 வேட்பாளர்களுக்குச் சாதகமாக ஆகஸ்ட் 2025-இல் நியமன ஆணைகளை வழங்கவும், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நபர்கள் ஒரு பதவிக்கு ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை கோரியுள்ளது.

கடிதத்துடன் ஆவணத்தொகுப்பு வெளியீடு

மேலும் அனுப்பிய கடிதத்துடன், 232 பக்கங்கள் கொண்ட ஆவணத் தொகுப்பு ஒன்றையும் அமலாக்கத்துறை வழங்கியுள்ளது. இதில், இந்த மோசடியில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் ஊழலில் அவர்களின் பங்கு பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆவணத் தொகுப்பு, இந்தத் தேர்வு முறைகேட்டின் செயல் திட்டம் (Modus Operandi) பற்றியும், யாருக்குச் சாதகமாக இந்த நடைமுறை கையாளப்பட்டதோ அந்த 150 வேட்பாளர்களின் விவரங்கள் பற்றியும் விளக்குகிறது.

அமலாக்கத்துறையின் சுதந்திர விசாரணை

லஞ்சங்களின் மூலம் நிரப்பப்பட்ட பணிகள் மற்றும் இதன் தொடர்பை (chain of collection) கண்டறியவும், இடைத்தரகர்கள் வழியாகப் பணம் சேகரித்து வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது.

லஞ்சப் பணத்தின் வழித்தடத்தை (Money Trail) ஆராய, தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு (FIR) செய்தால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை சுதந்திரமான விசாரணையைத் தொடங்க இது வழிவகுக்கும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகள், இந்த ஆண்டு ஆகஸ்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நியமிக்கப்பட்ட 2,538 உதவிப் பொறியாளர்கள், நகரத் திட்டமிடல் அதிகாரிகள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் தொடர்பானது. இந்த வேலைகளுக்கு 2024-இன் தொடக்கத்தில் சுமார் 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

டிவிஹெச் (TVH) வங்கி மோசடி வழக்குடன் தொடர்பு

இந்த விவரங்கள் அனைத்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ (True Value Homes – TVH) தொடர்பான வங்கி மோசடி வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த போது வெளிவந்ததாகக் கடிதத்தில் ED தெரிவித்துள்ளது.

டிவிஹெச் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் கே.என். நேரு, ரவிச்சந்திரன் மற்றும் சிலருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் குறித்த குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைக் கண்டறிந்ததாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவித்தது.

தீவிர விசாரணைக் கோரிக்கை

தற்போது, அமலாக்கத்துறை, ஊழல் மற்றும் தேர்வு நடைமுறையில் நடந்த முறைகேடுகள் (manipulation) குறித்து விசாரிக்க, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறையைக் கோரியுள்ளது.இத்தகைய வழக்குப்பதிவு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பணப் பரிமாற்றத்தை (money trail) விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுதந்திரமான விசாரணையைத் தொடங்க வழிவகுக்கும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.

மேலும் படிக்க : ED Raid: அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகளில் சோதனை: அமலாக்கத்துறை அதிரடி

லஞ்சம் கொடுத்தவர்களுக்குச் சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளன, அவர்களுக்கு நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றும், இவை அனைத்தையும் அரசியல்வாதிகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளும் அறிந்தே இருந்துள்ளனர் என்றும் ஆதாரங்கள் காட்டுவதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அமலாக்கத்துறை கேள்வி

மேலும், லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட பணம் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் மூலம் பணமோசடி (Laundering) செய்யப்பட்டிருப்பதற்கான பணப் பரிமாற்றத் தடயத்தையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

இந்த முறைகேடான நியமனங்கள் மற்றும் ஊழல் காரணமாக, ஆயிரக்கணக்கான தகுதியுள்ள வேட்பாளர்கள் இந்த முக்கியமான அரசுப் பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்தனர் என்று மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அரசுத் தேர்வு மற்றும் தெரிவு நடைமுறை தொடர்பான இரகசியத் தகவல்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்றும் அமலாக்கத்துறை கேள்விகளை எழுப்பியுள்ளது.

பணியினை ரத்து செய்ய வாய்ப்பு

இதைத்தொடர்ந்து இடைத்தரகர்கள் மூலம் வேட்பாளர்களிடமிருந்து லஞ்சம் ரொக்கமாகச் சேகரிக்கப்பட்டு, ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் முக்கியப் புள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளநிலையில்,

அமலாக்கத்துறை (ED) தனது கடிதத்தில், “தேர்வு நடைமுறையை மோசடி செய்ய” லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இது, அடிப்படையிலேயே ஆள்சேர்ப்புச் செயல்முறையின் நம்பகத்தன்மையைச் சிதைக்கிறது. நியமன ஆணைகள் வழங்கப்பட்டாலும், அது நேர்மையின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பதால், நீதித்துறையாலோ அல்லது நிர்வாக ரீதியிலோ அவை ரத்து செய்யப்படலாம்.

ஒரு பதவிக்கு ₹35 லட்சம் வரை லஞ்சப் பணம் ஆட்சியாளர்களின் கைகளில் புரண்டுள்ளது என்றால், தமிழக இளைஞர்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் தி.மு.க. அரசு எவ்வளவு கொடூரமாக விலை பேசுகிறது என்பது தெரியவருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in