முதல்வர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்றே திட்டமிட்டு முதல்வர் ஓர் அறிக்கையை தயார் செய்து சட்டப்பேரவையில் தீர்மானமாக வாசித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Governor RN Ravi's walks out, Edappadi Palaniswami met with reporters regarding walkout by AIADMK Members of Legislative Assembly
Governor RN Ravi's walks out, Edappadi Palaniswami met with reporters regarding walkout by AIADMK Members of Legislative AssemblySource : Edappadi K. Palaniswami Twitter
2 min read

வெளிநடப்பு செய்த ஆளுநர்

Edappadi Palanisamy Press Meet in TN Assembly : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநரின் உரையை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

எடப்பாடி செய்தியாளர்கள் சந்திப்பு

இந்தச் சூழலில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையிலிருந்து தமிழக அரசின் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கில் தோல்வி

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.

போதைப்பொருள் அதிகரிப்பு

தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் பலமுறை போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை.

இதனால் இன்று இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட மோசமான திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், முதல்வர் ஸ்டாலின் ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

திட்டமிட்டு தீர்மானம் உருவாக்கம்

இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் என்று ஸ்டாலின் தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறார். இன்று தமிழகத்தின் நிலையை ஆளுநர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். அமைச்சரவை தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டுமென சபாநாயகர் சொல்கிறார்.

ஆளுநரின் நியாயம் அது

ஆனால், உரையில் உள்ள தவறுகளை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார். தவறான செய்தியை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்கிறார், அவருடைய நியாயம் அதுதான்.

உரையில் உண்மை இல்லை

உரையில் உண்மைத்தன்மை இருந்தால்தான் வாசிக்க முடியும். தவறு இருப்பதால் சுட்டிக்காட்டுகிறார். இதனை இந்த அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஆளுநர் பற்றி என்ன செய்தி சொல்ல வேண்டுமோ,அதனை முன்கூட்டியே தயாரித்து வந்து, சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வருகிறார் முதல்வர்.

ஆளுநர் இப்படி நடந்துகொள்வார் என்பது முதல்வருக்கு எப்படி முன்கூட்டியே தெரியும். ஆக திட்டமிட்டு இந்த அரசாங்கம் ஆளுநர் மீது ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் முதல்வர் ஓர் அறிக்கையை தயார் செய்து சட்டப்பேரவையில் தீர்மானமாக கொண்டு வந்துள்ளார்.

மக்கள் பிரச்சினையை பேச வந்தோம்

ஆளுநர் உரையில் வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது. மரபுப்படி ஆளுநர் உரையில், ஆளுநர் உரை மட்டுமே இடம்பெற வேண்டும். ஆனால், முதல்வர் தனது கருத்துக்களை இதில் பதிவு செய்கிறார்.

இது எந்த வகையில் நியாயம். தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற ஆளுநரின் குற்றச்சாட்டு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மக்களின் பிரச்சினைகளை மட்டுமே இங்கு பேச வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in