ராதாபுரம் சட்டமன்ற தொகுதி : ”இன்பதுரை வெற்றி செல்லாது, அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிப்பு” : உயர்நீதிமன்றம் தீர்ப்பு...

2016ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
Madras HC sensational verdict,  Inbadurai's victory in Radhapuram  in 2016 elections invalid
Madras HC sensational verdict, Inbadurai's victory in Radhapuram in 2016 elections invalidgoogle
2 min read

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி

2016ம் ஆண்டு சட்​டப் ​பேர​வைத் தேர்​தலில் நெல்லை மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டனர்.

இன்பதுரை vs அப்பாவு

வாக்கு எண்ணிக்கையில், இந்த தேர்​தலில் வெறும் 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் இன்​பதுரை வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​வி்க்​கக்​ கோரி அப்​பாவு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதே ஆண்டு தேர்​தல் வழக்கு தொடர்ந்​தார்.

நீதிமன்றத்தில் அப்பாவு கோரிக்கை

தபால் வாக்கு எண்​ணுவதில் முறைகேடு நடைபெற்றதாக அப்பாவு குற்றம்சாட்டி இருந்தார். எனவே, இன்​பதுரை 49 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும், தான் வெற்றி பெற்றதாக வெளியிட வேண்டும் என்று அப்பாவு கோரியிருந்தார். .

உச்ச நீதிமன்றம் தடை

வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம் 2019ம் ஆண்டு அக்டோர் 1ம் தேதி மறு​வாக்கு எண்​ணிக்கை நடத்த உத்​தர​விட்​டது. அக்டோபர் 4ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், முடிவு​களை அறிவிக்​க கூடாது என உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது.

கடந்த மாதம் இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே 2021 மற்​றும் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​கள் முடிந்து விட்​ட​தால் 2016ல் தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கை நிலு​வை​யில் வைத்​திருப்​பது தேவையற்​றது எனக்​கூறி முடித்து வைத்​தது.

அப்பாவு வெற்றி பெற்றதாக அறிவிப்பு

இந்​நிலை​யில் இந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் பிறப்​பித்​த தீர்ப்​பில், ”தபால் வாக்​கு​களுக்கு பள்​ளித் தலைமை ஆசிரியர்​கள் சான்​றொப்​பம் அளிக்க முடி​யும் என்​ப​தால் மறு வாக்கு எண்​ணிக்கை அடிப்​படை​யில் தபால் வாக்​கு​களில் அப்​பாவு 153 வாக்​கு​களை பெற்​றுள்​ளார்.

இன்பதுரை வெற்றி செல்லாது

அதன்​மூலம் 104 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அப்​பாவு வெற்றி பெற்​றுள்​ளார்.எனவே அதி​முக வேட்​பாளர் இன்​பதுரை வெற்றி பெற்​றது செல்​லாது.

தற்​போதைய சூழலில் இன்​பதுரையை தகுதி நீக்​கம் செய்ய முடி​யாது என்​றாலும், 2016- 2021 கால​கட்​டத்​தில் சட்​டப்​பேரவை பதிவேடு​கள் உள்​ளிட்ட அரசு ஆவணங்​களில் ராதாபுரம் தொகு​தி​எம்​எல்ஏ என்ற இடத்​தில் இன்​பதுரை பெயரை நீக்​கி​விட்​டு, அப்​பாவு பெயரை இடம்​பெறச் செய்ய சட்​டப்​பேர​வைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இன்பதுரை சலுகை பெறத்தடை

தவறான முறை​யில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்ட இன்​பதுரை இந்த கால​கட்​டத்​துக்கு எம்​எல்ஏ என்ற முறை​யில் பென்​ஷன் உள்​ளிட்ட சலுகைகளை கோர முடி​யாது.

தாமதம் கூடாது - நீதிபதி கருத்து

உச்ச நீதி​மன்​றத்​தின் தலை​யீடு காரண​மாகவே இந்த தேர்​தல் வழக்​கில் முடிவு எடுக்க 10 ஆண்​டு​கள்​ தாமத​மாகி விட்​டது. நீதி​மன்​றங்​கள் ஏற்​படுத்​தும் இது​போன்ற தேவையற்ற தாமதங்​கள் ஜனநாயகத்​தின் ஆன்​மாவை வேரோடு வீழ்த்தி விடும் என்​பதை நினை​வில் கொள்ள வேண்​டும்.

இதே ரீதி​யில் நீதித்​துறை​யின் வருங்​கால பயணம் அமைந்​தால் பல நாடு​களில் நில​வும் சூழல் இந்​தி​யா​விலும் அரங்​கேறி​விடும்” இவ்​வாறு நீதிபதி ஜி.ஜெயச்​சந்​திரன் தனது தீர்ப்பில் தெரி​வித்தார்.

நீதி வென்றது - அப்பாவு மகிழ்ச்சி

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்​பாவு ‘‘10 ஆண்​டு​கள் தாமத​மாக இந்த தீர்ப்பு கிடைத்​தா​லும் எனது 10 ஆண்​டு​கால மன உளைச்​சலுக்கு வலி நிவாரணி​யாக நீதி கிடைத்​திருப்​பது மகிழ்ச்​சி​தான்’’ என்​றார்.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in