அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு ,5 ஆண்டுகளுக்கு அமல்..!

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
New medical insurance scheme  government employees and pensioners: Tamil Nadu government
New medical insurance scheme government employees and pensioners: Tamil Nadu government google
1 min read

அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் , தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2026 அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துளது

3ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்

தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டமானது வரும் ஜூலை 1 முதல் 2031-ம் ஆண்டு ஜூன் 30 வரை 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது

ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெற்றுக்கொள்ளலாம்

இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா முறையில் ரூ.7.50 லட்சம் வரை மருத்துவ உதவி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தீவிர நோய்களுக்கான சிகிச்சை வசதி வழங்கப்படும்

இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் 6 வகையான தீவிர நோய்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வரை சிகிச்சை வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

2,992 , அறுவை சிகிச்சைகள் இத்திட்டதில் சேர்ப்பு

அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக கார்ப்பஸ் நிதி மூலம் ரூ.15 லட்சம் வரை உதவி கிடைப்பதால், மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும். இந்த திட்டத்தில் 2,992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் , அரசு அறிவிப்பு

1,535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி,

சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோரும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்த ஊதியம் பெறுவோருக்கான பிரீமியத்தை அரசே ஏற்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in