

Refusing to invite Vijay to form the government amounts to disrespecting the mandate of the people of Tamil Nadu — Kamal Haasan.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றி தனிப்பெரும்பான்மை மற்றும் காங்கிரசின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்றும் ( இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை ) தமிழக ஆளுநர் ஆர்.வி அர்லேகர் தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது குறித்து கமல்ஹாசன் எம்.பி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
அரசியல் முதிர்ச்சி
என் சகோதரர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பது
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும்.
மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்
233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் தான்
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல்
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும் என்று தனது அறிக்கையில் கமல்ஹாசன் எம்.பி. கூறியுள்ளார்.
=====