

மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை :
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பொறியியல் படிப்பில் சேர்வது பல மாணவர்களின் கனவாக இருந்தது.
பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் பெறுவதற்காக கடும் போட்டி நிலவிய நிலையில், தற்போது அந்த நிலைமை மாறி வருவதாக சமீபத்திய சேர்க்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
முதல் கட்ட கலந்தாய்வில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலி :
சமீபத்தில் நடைபெற்ற முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் 54,530 பொறியியல் இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யம் :
இந்த ஆண்டின் சேர்க்கை நிலவரத்தில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக, தமிழ்நாட்டில் உள்ள 3 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவர்களின் தேர்வு மாறிவிட்டதா?
கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், கணக்கியல், தகவல் தொழில்நுட்ப திறன் சார்ந்த படிப்புகள் மற்றும் வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், AI, Data Science, Cyber Security போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கே அதிக தேவை காணப்படுவதால் பாரம்பரிய பொறியியல் பிரிவுகளில் சேர்க்கை குறைந்து வருகிறது.
வேலைவாய்ப்பு கவலையும் ஒரு காரணம் :
பொறியியல் படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு கிடைப்பது குறித்த சந்தேகமும் சில மாணவர்களிடம் உருவாகியுள்ளது.
இதனால் பலர் தங்களது தொழில் இலக்குகளுக்கு ஏற்ற மாற்றுப் படிப்புகளை தேர்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தியா அளவில் மாணவர்கள் சேர்க்கை குறைவு :
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா அளவில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து காணப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர் இதற்கான முதன்மை காரணம் மாணவர்கள் பலர் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் அவர்களுக்கான எதிர்காலம் கேள்விக்குறி என கருதுவதால் சேர்க்கை குறைந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர்
=============