திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு : சென்னையில் கைது, தஞ்சாவூரில் விசாரணை, விடுவிப்பு” : பரபரப்பான 10 மணிநேரம்...!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தஞ்சை பேச்சு எதிரொலியாக, சென்னையில் கைது செய்யப்பட்ட அவர், தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
speech in Thanjavur,  Udhayanidhi Stalin was arrested in Chennai, taken to Thanjavur, and released
speech in Thanjavur, Udhayanidhi Stalin was arrested in Chennai, taken to Thanjavur, and releasedAI generated
2 min read

தஞ்சாவூரில் திமுக ஆர்ப்பாட்டம்

தஞ்​சாவூரில் நடை​பெற்ற திமுக ஆர்ப்​பாட்​டத்​தில் ஆபாச​மாகப் பேசி​ய​தாக உதயநிதி மீது குற்​றம் சாட்​டப்​பட்டது, தவெகவினர் அளித்த புகாரின் பேரில், தஞ்சை போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை விரைந்தனர்.

உதயநிதியிடம் விசாரணை

நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டா​லின் வீட்டிற்கு சென்ற அவர்கள், பின்னர் விசாரணைக்காக அவரை தஞ்சாவூருக்கு வேனில் அழைத்து சென்றனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே பதற்றம் நிலவியது.

திமுக பொதுச் செய​லா​ளர் துரை​முரு​கன், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, சபரீசன், கட்​சி​யின் சட்​டத் துறை நிர்​வாகி​கள் உட்பட பலர் உதயநிதி இல்​லத்​தில் குவிந்ததால் பரபரப்பு கூடியது.

உதயநிதி ஸ்டாலின் கைது

புகாரின் அடிப்​படை​யில், 9 பிரி​வு​களின் கீழ் உதயநி​திக்கு எதி​ராகப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். காலை 10.30 மணிக்கு மேல் போலீசார் உதயநிதி ஸ்டா​லினைக் கைது செய்​து வேனில் ஏற்றினர்.

போலீசாருடன் திமுகவினர் தள்ளுமுள்ளு

உதயநி​தியை அழைத்​துச் சென்ற போலீஸ் வாக​னத்​தைத் தடுத்து நிறுத்​திய திமுக​வினர், அரசுக்கு எதி​ராகக் கோஷங்​களை எழுப்​பினர். வாக​னத்​தின் முன்​பாக சாலை​யில் படுத்தும் மறியல் செய்​தனர். இதனால் போலீ​சாருக்​கும் திமுக​வினருக்​கும் இடையே கடும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

பல்வேறு இடங்களில் திமுகவினர் கைது

பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து போலீ​சார் அப்​புறப்​படுத்​தினர். இதனால் பதற்​றம் ஏற்​பட்​டது.

தவெகவினரும் போராட்டம்

உதயநிதி ஸ்டா​லின் பேச்​சுக்​குக் கண்​டனம் தெரி​வித்து தவெக​வினர் வடக்கு கடற்​கரை மற்​றும் பரங்​கிமலை பகு​தி​யில் போராட்​டம் நடத்​தினர்.

தஞ்சாவூரில் உதயநிதி

பலத்த பாது​காப்​புடன் உதயநிதி ஸ்டா​லின் தஞ்​சாவூர் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். மாலை 6.30 மணி​யள​வில் திருச்சி வழி​யாக உதயநி​தியை போலீ​ஸார் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். ஆனால், திடீரென செங்​கிப்​பட்டி காவல் நிலை​யத்​துக்​கு உதயநிதியை அழைத்துச் சென்​ற​னர்.

வேனில் காத்திருந்த உதயநிதி

அங்​கு, தனது வழக்​கறிஞர்​கள் வந்​தால்​தான் காவல் நிலை​யத்​துக்​குள் வரு​வேன் என்று கூறிய உதயநிதி வாக​னத்தை விட்டு இறங்​காமல் சுமார் அரை மணி நேரம் காத்​திருந்​தார். திமுக வழக்​கறிஞர்​கள் அங்கு வந்த பிறகு, வாக​னத்​தில் இருந்து உதயநிதி இறங்கி காவல் நிலை​யத்​துக்​குள் சென்​றார்.

போலீசார் விசாரணை

தஞ்​சாவூர் எஸ்​.பி. சுந்​தர​வதனம் முன்​னிலை​யில், தஞ்​சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்​வாளர் மணி​கண்​டன் விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது, போலீ​ஸாரின் கேள்வி​களுக்கு உதயநிதி பதிலளித்​தார்.

உதயநிதி விடுவிப்பு

சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடை​பெற்ற விசா​ரணைக்​குப் பிறகு 8.15 மணி​யள​வில் உதயநி​தி​யைப் போலீ​ஸார் விடு​வித்​தனர்.

உதயநிதிக்கு முன்ஜாமின்

முன்​ன​தாக உதயநிதி ஸ்டா​லினுக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவசர மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனு மீது விசா​ரணை நடந்த போது, “தஞ்​சாவூரில் காவல் நிலைய விசா​ரணைக்​குப் பிறகு அவர் விடுவிக்​கப்​படு​வார். நீதி​மன்ற காவலுக்கு அனுப்​புவது எங்​கள் நோக்​கமல்ல” என்று அரசு தரப்​பில் கூறப்​பட்​டது.

அதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், “உதயநி​தியை வி​சா​ரணை முடிந்​ததும்​ போலீ​ஸார்​ இன்​றே (நேற்​று) விடுவிக்​க வேண்​டும்​. உதயநி​தி ஸ்டா​லினும்​ போலீ​ஸாரின்​ வி​சா​ரணைக்​கு ஒத்​துழைக்​க வேண்​டும்​” என்​று உத்​தரவிட்​டார்​.

பரபரப்பான அரசியல் களம்

உதயநிதி கைது, விசாரணை, விடுவிப்பு, நீதிமன்ற உத்தரவு, திமுகவினர் மறியல், தவெகவினர் போராட்டம் என தமிழக அரசியல் களம் நேற்று மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in