”அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீங்க, மக்கள் மனதில் அவர் இருக்கிறார்” : முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில்...!

அப்பா சட்டமன்றத்தில் இல்லை, மக்கள் மனதில் இருக்கிறார் என முதல்வர் விஜய்க்கு, மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
Stalin hit back at Vijay, stating that father is not in Assembly but in the hearts of the people
Stalin hit back at Vijay, stating that father is not in Assembly but in the hearts of the peoplegoogle
1 min read

சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் குட்டிக்கதை ஒன்றை கூறி, எங்கே உங்க அப்பாவை காணோம் என்று ஸ்டாலின் சட்டசபையில் இல்லாததையும், அவரது தொல்வியையும் சுட்டிக் காட்டி பேசி இருந்தார்.

மு.க. ஸ்டாலின் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் மு.க. ஸ்டாலின். திருவாரூரில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கையை கண்ணனுக்கு மேலே வைத்து கொண்டு எங்கே உங்க அப்பாவை காணோம் என்று முதல்வர் பேசி இருக்கிறார்.

மக்கள் மனதில் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான்தான் முதலமைச்சர்.

“கோட்டையில் என்னை பார்க்க வேண்டும் என்றால் கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான்” என்று அவர் பேசினார்

60 ஆண்டுகளா மக்கள் மன்றத்தில்...

அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறார். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத்தான் பணியாற்றி வருகிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது சென்றிருக்கிறேன். நான் ஆய்வு கூட்டம் நடத்தியதைப்போல யாரும் செய்திருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன. அந்தக் கோப்புகளை எடுத்துப் பாருங்கள்.

கோப்புகளில் நான் இருக்கிறேன்

அதில், மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்திட்டுள்ளேன்.

அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடுதான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்.

நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த தமிழ்நாடு உள்ளவரை நான்தான் முதலமைச்சர் என்று அண்ணா சொன்னார். அதுபோல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர் என சொல்லலாம்.

கருணாநிதி கூட்டணி அமைத்தால் வைத்திருப்பார். அவர்களாகத்தான் போனால் போவார்கள் தவிர, வெளியேற்ற மாட்டார். அந்த வழியில்தான் நான் கூட்டணியைப் பாதுகாத்தேன்.

கூட்டணி - இனி பரிசீலிப்போம்

ஆனால் இன்றைய மக்கள் எல்லாம் கூட்டணியே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். எனவே அதையும் பரிசீலிப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in