

Stalin's case challenging V.S. Babu's victory dismissed: Madras High Court order!
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கொளத்தூர் வெற்றி வழக்கின் பின்னணி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இத்தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
கால வரம்பு விலக்கு கோரிக்கை
பொதுவாகத் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட 45 நாட்களுக்குள் வழக்கு தொடராத நிலையில், காலதாமதத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
வாக்கு எந்திர முறைகேடு புகார்
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுப்பிய அவர், அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) பதிவுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு
இந்த மனு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (03.09.2026) தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை வழங்கியது.
தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள்
அதில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி, மு.க.ஸ்டாலினின் வழக்கினைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: TN Assembly : உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு அங்கீகாரம்!!சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்...
======