விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் , கடந்த மாதம் இறுதி தேர்வுகள் முடிந்து விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருந்தது .
அரசு, அரசு உதவி பெறும்,ம் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
மீண்டும் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
வானிலை முன்னறிவிப்பு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவை தொடர்பான ஆயத்த பணிகளையும் தமிழக அரசு ஆய்வு செய்தது. இவற்றை கவனமாக பரிசீலித்த பின்னர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும். என்று பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது
மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
இந்த நிலையில் மாணவர்களின் வசதிக்காக அனைத்து அரசு பேருந்துகளிலும் மாணவர்கள் இலவசமாக பயணிகலாம் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அமைச்சர் கூறியதாவது
026 – 2027 கல்வியாண்டிற்கான வேலை நாள் வரும் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது பள்ளி தொடங்கியப்பின்னே புதியஇலவச பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்நிலையில் மாணவர்கள் தங்களது பள்ளி சீருடையுடன் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க. வரும் 04.06.2026 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்.
2026-27 கல்வியாண்டில் மாணவர் மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக எற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======================