

தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் அளித்த வாக்குறுதிகளை பார்ப்போம்...
* தவெக ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.
* 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வதற்கும்...
* 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை
* திமுக போல் எல்லாருக்கும் என்று சொல்லிவிட்டு, பின் தகுதி நிர்ணயம் செய்து ஏமாற்றாமல் அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வோம்.
* 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்களாக யாரும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில்...
* அவர்களின் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வித படிப்புகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.
* விவசாயிகளுக்கு நலனுக்கு எதிராக உள்ள திட்டங்களை, மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும் தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.
* கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் முறையாகப் பாதுகாக்கப்படும். நெல் மூட்டைகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளும்.
* போதுமான கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மீறினால் கடும் நடவடிக்கை
* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும்.
* கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்குப் பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.
* ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.
* மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை தவெக அரசு கொடுக்கும்.
* கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்காக நம் அரசு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும்.
* அரசு வேலைவாய்ப்புகள், தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தாலே, நம் இளைஞர்கள் அவர்களது வழியை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
* கோடிகளில் ஒப்பந்தம் என்று விளம்பரம் மட்டும் செய்யாமல், உண்மையான ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதைச் செயல்படுத்தினாலே எல்லாம் தானாக நடக்கும்.
* தவெக ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியைக் கொடுக்க முயன்றாலே போதும் எல்லாம் நன்றாக நடக்கும்
என்று தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் வாக்குறுதி அளித்தார்.
======================