
கரூர் துயரச் சம்பவம் :
TVK Leader Vijay Released Video on Karur Stampede Issue : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது, ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக இரங்கல் தெரிவித்த அனைத்து கட்சித் தலைவர்களும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மவுனம் காத்த விஜய் :
ஆனால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மட்டும் கரூர் செல்லவில்லை. மூன்று நாட்களாக பனையூர் இல்லத்தில் தங்கியிருக்கும் அவர், இதுவரை கரூருக்கு செல்லவில்லை. அவர் அனுமதி கேட்டும் போலீஸ் தரப்பில் சட்டம். ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 2 நாட்களாக விஜய் வாய் திறவாமல் இருப்பது, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மவுனம் காப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
என் வாழ்க்கையில் வேதனையான சூழ்நிலை :
இந்தநிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜய்(TVK Vijay Latest Video), “ அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இதுபோன்ற வேதனையான சூழ்நிலையை நான் சந்தித்தது கிடையாது. மனது முழுக்க வலி. வலி மட்டும் தான்.
மக்களின் அன்பே காரணம் :
இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான் . அந்த அன்புக்கும், பாசத்துக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டு உள்ளேன். அதனால் தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாண்டி, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்ற எண்ணம் தான் என் மனதில் ஆழமாக இருக்கும்.
மக்கள் பாதுகாப்பே முக்கியம் :
எனவேதான், அரசியல் காரணங்களை அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு. மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் வைத்து அதற்கான இடங்களை தேர்வு செய்வது, அதற்கான இடங்களை அனுமதி கேட்பது, போலீசாரிடம் அப்படிதான் கேட்போம். ஆனால் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.
கருர் செல்லாமல் தவிர்த்தது ஏன்? :
நானும் மனிதன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுட்டு இருக்கும் போது எப்படி அந்த ஊரை விட்டுவிட்டு கிளம்பி வர முடியும். நான் திரும்ப அங்கு சென்று இருந்தால், அதை ஒரு காரணம் காட்டி, வேறு விஷயும், பதற்றமான சூழ்நிலை, வேறு சில விஷயங்கள், அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தவிர்த்தேன்.
சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல்
இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கிற அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்(TVK Vijay on Karur Death). எனக்கு தெரியும். என்ன சொன்னாலும், இது ஈடே ஆகாது என எனக்கு தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் குணமடைந்து வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன்.
துணை நின்ற அரசியல் கட்சிகளுக்கு நன்றி :
இந்த நேரத்தில் எங்களின் வலிகளை எங்களி் நிலைமையை புரிந்து கொண்டு பேசிய அரசியல், கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டதட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை.
கரூரில் மட்டும் ஏன் இப்படி? :
கரூரில் மட்டும் நடக்கிறது. எப்படி நடக்கிறது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு உள்ளனர். கரூரைச் சேர்ந்த மக்களை உண்மையை எல்லாம் வெளியில் சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து உண்மையை சொல்வது போல் தெரிந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை :
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்கள் நின்று பேசி வந்தது தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எதுவும் செய்யவில்லை. இருந்தாலும் கட்சி நிர்வாகிகள்,தோழர்கள் மீது வழக்குப்பதிவு, சமூக வலைதளத்தை சேர்ந்த நண்பர்கள் மீது வழக்குப்போட்டு கைது செய்கின்றனர்.
என்னை பழிவாங்குங்க ஆனால்...? :
சிஎம்சார், உங்களுக்கு ஏதாவது பழிவாங்கும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
மேலும் படிக்க : Karur Stampede: நெரிசலான இடத்தில் பிரசாரம்: திமுக அரசுக்கு கேள்வி
வலிமையாக அரசியல் பயணம்
நண்பர்களே, தோழர்களே, நமது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் தைரியத்துடன் தொடரும். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் விஜய் பேசி உள்ளார்.
===========