உதயநிதி வேட்பு மனுவில் சொத்து விவரம் முரண்பாடு : வருமான வரித்துறை விசாரிக்க உத்தரவு : ஏப்ரல் 20 விசாரணை!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் உதயநிதி குறிப்பிட்டுள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது
Udhayanidhi's asset details discrepancy in nomination: Notice to Income Tax Department to investigate,
Udhayanidhi's asset details discrepancy in nomination: Notice to Income Tax Department to investigate, google
1 min read

வருமான வரித்துறை விசாரிக்க நோட்டீஸ்

வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான அனைத்தும் முரண்பட்டதாக இருப்பதாக கூறி சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல வழக்கு தொடர்ந்திருந்தார்

தாக்கல் செய்யப்பட்ட மனு

இதுதொடர்​பாக அவர் தாக்​கல் செய்​துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது ,உதயநிதி ஸ்டா​லின் 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​பு மனு​வில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​திருந்​த​தாக குறிப்​பிட்டு இருந்​தார்.

ஆனால், தற்​போதைய தேர்​தல் மனு​வில் அந்த விவரங்​கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

முறையான விளக்கம் இல்லை

இந்த பரிவர்த்​தனை தொடர்​பாக முறை​யான விளக்​கங்​கள் வேட்​புமனு​வில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறு​வனத்​துக்கு கடன்கொடுத்​துள்​ள​தாக கூறி​யுள்ளார்.

ஆனால், தற்​போது ரூ. 10 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ. 1 கோடியே 6 லட்​சம் பணம் திருப்பி செலுத்​தப்​பட்டு வி்ட்​டதா என்ற விவர​மும் தெரி​விக்​கப்​பட​வில்​லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

சொத்து முரண்பாடு

மேலும் அவர் வேட்புமனுவில் 2020-ம் ஆண்​டுக்கு முன்​பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வரு​மானம் உள்​ள​தாக குறிப்பிட்டுயிருக்கிறார்.

ஆனால், தற்​போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வரு​மானம் உயர்ந்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளார்.

வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்​புக்கு உரிய விளக்​கம் அளிக்​கப்​பட​வில்​லை. தனக்​குள்ள சொத்​துகள் குறித்து முரண்​பா​டான தகவல்​களை வேட்​பாளர்​கள் வேட்​புமனு​வில் தெரி​விப்​பது மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்கு எதி​ரானது என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்

வருமான வரித்துைறை விசாரணை செய்ய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நநீதிமன்ற நீதிபதி அமர்வு , சொத்து முரண்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் , வருமான வரித்துறை இதனை விசாரித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை

இந்த சொத்து ,முரணப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை செய்யப்படும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in