

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :
* வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்கிறது.
* மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாக, அதாவது 19 சதவீத வளர்ச்சியுடன் கணிக்கப்பட்டுள்ளது.
* உண்மையான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீதமாகவே இருக்கும். வருவாய் சுமார் ரூ.2,08,000 கோடியாக மட்டுமே இருக்கும்.
* வருவாய் பற்றாக்குறை 2026-27-ம் ஆண்டில் ரூ.90,500 கோடியை எட்டக்கூடும்.
* நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி ரூபாய்க்கு மாறாக ரூ.1.64 லட்சம் கோடி ரூபாயை நெருங்கக்கூடும்.
* தமிழகத்தில் முதியவர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் 10.6 சதவீதமாக இருந்த நிலையில், 2031ம் ஆண்டுக்குள் 18.2 சதவீதமாக உயரும்.
* முதியோர் சார்ந்திருக்கும் விகிதம் 2036-ம் ஆண்டுக்குள் 32.7 சதவீதமாக உயரும்.
* பணிபுரியும் வயதினர் எண்ணிக்கை குறைந்து வருவதால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் குறையும்.
* அதிகரித்து வரும் முதியவர்களின் எண்ணிக்கை சமூகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான செலவினங்களை அதிகரிக்கச் செய்கிறது.
* இத்தகைய விளைவுகள் மாநிலத்தை கடன் வலையை நோக்கி தள்ளும் என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
===================