"ஊழல்கள் தனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா"? : அண்ணாமலை கேள்வி?

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு பண மோசடி வழக்கில் தகவல் அறிக்கை பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Will Chief Minister MK Stalin say that corruption took place without his knowledge - Annamalai Question!
Will Chief Minister MK Stalin say that corruption took place without his knowledge - Annamalai Question!google
1 min read

அண்ணாமலை வரவேற்பு

Annamalai Questions CM MK Stalin on KN Nehru ED Case : தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்

கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ₹888 கோடி ஊழலில், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது.

திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது

அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ₹1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது.

பலமுறை கடிதம் அனுப்பியது அமலாக்கத்துறை

இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ₹365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.

ஒரு ஆண்டில் மட்டும் 2,300 கோடி ஊழல்

தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் திரு @mkstalin தற்போது என்ன பதில் கூறப் போகிறார்

திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ₹2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது?

முதல்வருக்கு தெரியாமல் நடந்ததா?

இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் திரு @mkstalinஅவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ₹1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ₹365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் திரு.கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in