தமிழகத்தில் 85.15% வாக்குப்பதிவு, புதிய வரலாறு! : இளைஞர்கள், பெண்கள் ஆர்வம் : மாற்றத்தை நோக்கி நகர்கிறதா தமிழகம்!

தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு சதவீதம் 85.15 சதவீதம் என்ற சாதனை அளவை எட்டியது.
young people, women in Tamil Nadu enthusiastically gathered to vote, the voter turnout reached  85.15 percent
young people, women in Tamil Nadu enthusiastically gathered to vote, the voter turnout reached 85.15 percent google
2 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

அசம்பாவிதங்கள் எதுவுமின்றி தமிழகத்தில்வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்​ணிக்கை மே 4ம் தேதி நடை​பெற உள்​ளது.

அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​த​படி, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.

பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர், 83,875 காவல் துறை​யினர், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். 1.06 லட்​சம் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன.

வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்​சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து நேரடி​யாக கண்​காணிக்​கப்​பட்​டது.

ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், திரு​வள்​ளூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பசுமை வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டு, வாக்​காளர்​களை உற்​சாக​மாக வரவேற்​று, மகிழ்ச்​சி​யுடன் வாக்​களிக்க வைத்​தனர்.

காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். வெயிலை தவிர்க்​கும் வித​மாக, காலை 7 மணிக்கே முதி​யோர்​கள் அதிக அளவில் வாக்​குச்​சாவடிகளுக்கு வந்து வாக்​கு​களை செலுத்​தினர். சக்கர நாற்​காலி மூலம் முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களை அழைத்​துவர தன்​னார்​வலர்​கள் உதவினர்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புதுமண தம்பதிகள்

முகூர்த்த நாள் என்​ப​தால் பல்​வேறு பகு​தி​களி​லும் புது​மணத் தம்​ப​தி​கள் மணக்​கோலத்​தில் வந்து வாக்​களித்​தனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காலை 9 மணிக்​குள்​ளாக 17.69 சதவீத வாக்​கு​களும், பிற்​பகல் ஒரு மணிக்​குள் 56.81 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. குறிப்​பாக, இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்​களித்​தனர். இதனால், தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்தது.

மின்னணு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

சில வாக்​குச்​சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்​குப்​ப​திவு நீடித்​தது. அசம்​பா​விதங்​கள் எது​வுமின்றி தமிழகம் முழு​வதும் அமை​தி​யாக வாக்​குப்​ப​திவு நடந்து முடிந்​தது.

பின்​னர், அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சீல் வைக்​கப்​பட்​டு, அந்​தந்த தொகு​தி​க்​கான வாக்கு எண்​ணும் மையத்துக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

தமிழகம் முழு​வதும் 63 வாக்கு எண்​ணும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

எஸ்ஐஆர் பணி - அதிகரித்த வாக்கு சதவீதம்

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது.

இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

கரூரில் வாக்கு சதவீதம் அதிகம்

எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in