நேபாள வெள்ளத்தில் ”175 பேர் உயிரிழப்பு” : 133 இந்தியர்கள் உட்பட 750 பேர் மாயம்? : மீட்பு பணிகள் மும்முரம்...!

நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. 750க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
death toll from flash floods in Nepal has risen to 175. more than 750 people are missing.
death toll from flash floods in Nepal has risen to 175. more than 750 people are missing.AI generated
2 min read

பனிமலைகளில் உடைப்பு

நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​களில் ஏற்பட்ட உடைப்பு பேரழிவை ஏற்படுத்தியது. இதனால், க கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் வெள்ளப்​ பெருக்கு ஏற்​பட்​டது.

கரைபுரண்ட வெள்ளம்

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை கண் இமைக்கும் நேரத்தில் அடித்​துச் சென்று, வரலாறு காணாத பேரழிவை ஏற்​படுத்​தி​யது.

வெள்ளத்தின் கோர தாண்டவம்

ஆற்​றுப் படு​கையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள் நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் சரிந்து விழுந்​தன. பெரும் பாலங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. வாகனங்கள், பொதுமக்கள் என வழியில் இருந்த அனைத்தையும், இழுத்து சென்றது வெள்ளம்.

இதுதொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

175 பேர் பலி, 750 பேர் மாயம்

வெள்​ளத்​தில் சிக்கி இது​வரை 175 பேர் உயி​ரிழந்ததாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. மேலும் காணா​மல் போன 750-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வெள்​ளத்​தில் 9 பாது​காப்​புப் படை​யினர் மற்​றும் 60 நீர்​மின் நிலைய தொழி​லா​ளர்​கள் காணா​மல் போயுள்​ளனர்.

நேபாள சுற்​றுலா வாரி​யத்​தின்​படி,133 இந்​தி​யர்​கள் உட்​பட750 பேர் காணா​மல் போயுள்​ள​தாக தகவல் தெரிவிக்​கின்​றன.

மின் விநியோகம் முடக்கம்

ராசு​வாக​தி, சிலிமே, திரிசூலி நீர்​மின் நிலை​யங்​கள் உட்பட 6 முக்​கிய மின் உற்​பத்தி மற்​றும் பரி​மாற்ற நிலை​யங்​கள் வெள்​ளத்​தில் சேதமடைந்​த​தால் நேபாளத்​தில் மின் விநி​யோகம் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

மலைப்பகுதிகளில் நிலநடுக்கம்

நிலநடுக்​கத்​தால் பனிப்பாறைகள் உடைந்ததால், ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாகவே பெருவெள்ளம் ஏற்பட்டதாக நேபாள வெளி​யுறவுத் துறை அமைச்​சர் சிஷிர் கனால் தெரி​வித்​தார்.

தேடும் பணி தீவிரம்

காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

பிரதமர் மோடி உறுதி

நேபாள பிரதமர் பாலேந்​திர ஷாவிடம் தொலைபேசி​யில் பேசிய இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்து கொண்​டார்.

அத்​துடன், தேவை​யான அனைத்து மனி​தாபி​மான மற்​றும் மீட்பு உதவி​களை​யும் இந்​தியா வழங்​கும் என உறுதி அளித்​துள்​ளார்.

தயார் நிலையில் நிவாரண பொருட்கள்

நேபாளத்​தில் நிவாரணப் பணி​களில் ஈடுபட இந்​திய விமானப் படை​யின் சி-17 மற்​றும் சி-130 விமானங்​கள் நிவாரணப் பொருட்​கள், மருந்​துகள் மற்​றும் மண் தோண்​டும் இயந்​திரங்​களு​டன் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அவை விரை​வில் நேபாளத்​துக்கு கொண்டு செல்லப்பட்டு, மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​படுத்தப்படும்.

உதவி எண்கள் அறிவிப்பு

தலைநகர் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் அவசர தொலைபேசி எண்​களை அறி​வித்​துள்​ளது. தொலைபேசி / வாட்​ஸ்​அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்​களைத் தொடர்பு கொண்டு விவரங்​கள், உதவி​கள் பெறலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நேபாளம் சென்ற தமிழர்கள்

இதற்​கிடை​யில், தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்​திரைக்​குச் சென்​றனர்.

அவர்​கள் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்​ளனர். அவர்​களைக் கும்​பகோணத்​தைச் சேர்ந்த சூப்​பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறு​வனம் அழைத்​துச் சென்​றுள்​ளது.

தமிழர்கள் பத்திரமாக மீட்பு

இவர்​கள் காத்​மாண்டு பகு​தி​யில் 3 வாக​னங்​களில் சென்று கொண்​டிருந்​தனர். அப்​போது அப்​பகு​தி​யில் திடீரென பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

இதில் ஒரு வாக​னத்​தில் சென்ற 20 பேர் தப்பி பத்​திர​மாக உள்​ள​தாக​வும், மற்ற 2 வாக​னங்​களில் சென்ற 37 பேர் வெள்​ளத்​தால் ஏற்​பட்ட நிலச்​சரி​வில் சிக்​கி, பின்​னர் மீட்​கப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

==========

logo
Thamizh Alai
www.thamizhalai.in