

இந்தியாவின் அமைதி முயற்சிக்கு ரஷ்யா பாராட்டு :
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்றுள்ளார்.
உலக அரங்கில் இந்தியா வகிக்கும் சமநிலையான பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இந்தியா
இந்தியா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவர தேவையான எந்த உதவியையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மோடியின் 'இது போர் காலம் அல்ல' நிலைப்பாடு மீண்டும் கவனம் :
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, உரையாடல் மற்றும் தூதரக பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைதி அழைப்பு பல்வேறு சர்வதேச மேடைகளில் கவனம் பெற்றுள்ளது.
அமைதித் தூதராக இந்தியா?
ரஷ்யாவுடனும் உக்ரைனுடனும் நல்லுறவை பேணிவரும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இதனால் எதிர்கால அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அமைதி முயற்சியை பாராட்டிய கிரம்ளின்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்லின் பாராட்டியுள்ளது.
கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணிவருவதால், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா மதிப்பதாகவும் கூறியுள்ளார்.
=================