ஒரே நாட்டை சேர்ந்த 3 ஆய்வாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

Nobel Prize in Physics 2025 Winners List : இயற்பியலுக்கான நோபல் பரிசு ஒரே நாட்டை சேர்ந்த ( அமெரிக்கா ) 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Nobel Prize in Physics 2025 Winners List Announcements in Tamil
Nobel Prize in Physics 2025 Winners List Announcements in Tamil
1 min read

Nobel Prize in Physics 2025 Winners List : உலகத்தின் முக்கியமான, முதன்மையான விருதாக கருதப்படும் நோபல் பரிசு அறிவிக்கும் முதல் நாளில் மருத்துவத்திற்கு பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இயற்பியலுக்கான நோபல் பரிசு :

இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று, இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis) உள்ளிட்ட 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் கணினிக்கான சிப்

குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசை இரண்டு நபர்கள் பெற்ற நிலையில், தற்பொழுது ஒரே நாட்டை சேர்ந்த 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் நோபல் பரிசு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு -3 விஞ்ஞானிகள்- மேரி பிரங்கோ(Mary E. Brunkow), பிரட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமொன் சாகாகுச்சி(Shimon Sakaguchi)

இயற்பியல் - 3 ஆராய்ச்சியாளர்கள்- ஜான் கிளார்க்(John Clarke), மைக்கேல் எச். டெவோரெட்(Michel H. Devoret), ஜான் எம். மார்டினிஸ் (John M. Martinis)

மேலும் படிக்க : 3 நபர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு!வாழ்த்துமழையில் வெற்றியாளர்கள்!

நோபல் பரிசு பெறும் மூவரும் மீள்கடத்தி மின்சுற்றை பயன்படுத்தி இந்த சோதனையை கண்டறிந்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

வேதியியல் - அக்.,8

இலக்கியம் - அக்.,9

அமைதி - அக்.,10

பொருளாதாரம் - அக்., 13 நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in