

US Ceasefire Extension Against Iran: President Trump Accepts Pakistan's Request!
ஈரான் அமெரிக்கா போர்
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மாற்றமாக, போர்நிறுத்தக் காலத்தை அதிபர் டிரம்ப் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை அறிக்கை
பாகிஸ்தான் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தம்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் விடுத்த அதிகாரப்பூர்வ வேண்டுகோளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது.
பாகிஸ்தானின் முயற்சி
ஈரானிய அரசாங்கம் தற்போது பிளவுபட்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் இந்தத் தூது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
போர்நிறுத்தம் மற்றும் டிரம்பின் நிபந்தனை
இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஒருமித்த அமைதித் திட்டத்தை சமர்ப்பிக்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்படும்.
போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும்
அந்தத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர்நிறுத்தம் நீட்டிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பில் ஹோர்முஸ் நீரிணை
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், ஈரானின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
ஈரான்,அமெரிக்க போர் ஒரு சர்வதேசப் பார்வை
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் பதற்றம், தற்போது பாகிஸ்தானின் தலையீட்டால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து
எனினும், ஈரான் சமர்ப்பிக்கப் போகும் அமைதித் திட்டத்தைப் பொறுத்தே வளைகுடா நாடுகளின் எதிர்காலம் அமையும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
=====