

நோபல் பரிசு - டிரம்ப் ஆவல்
US President Donald Trump Awarded FIFA's New Peace Prize 2026 : அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு போர்களை நிறுத்தி இருப்பதால், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த அவர், தான் மேற்கோண்ட அமைதி முயற்சிகளுக்காக 8 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஃபிஃபா அமைதி விருது
இந்தநிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் ஃபிஃபா அமைப்பு, அமைதிக்கான பரிசு ஒன்று நிறுவி இருக்கிறது. ஃபிஃபா அமைதிக்கான விருது என்று அது அழைக்கப்படுகிறது. இந்த விருது அதிபர் டொனால்டு டிரம்பிற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமைதிக்கான விருது
அமைதிக்காக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை அதிபர் டிரம்ப் மேற்கொண்டமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள கென்னடி மையத்தில் 2026 உலகக் கோப்பை குரூப் டிரா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார்.
”FIFA Peace Prize – World Football Unites” என்ற அமைப்பின் தொடக்க விருது டிரம்பிற்கு வழங்கப்பட்டது. ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ டிர்மிற்கு விருதினை வழங்கினார். டிரம்பின் விருப்பமான பாடகியான ஆண்ட்ரியா போசெல்லியின் நிகழ்ச்சியில் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
டிரம்ப் - ஃபிஃபா நிர்வாகம் நெருக்கம்
ஃபிஃபா நிர்வாகத்திற்கும், டிரம்பிற்கு இடையேயான நெருக்கும் அலாதியானது. 2வது முறை அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, FIFAவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தான் உருவாக்கிய அமைதி விருது முதல் நபராக டிரம்பிற்கு வழங்கி இருக்கிறது ஃபிஃபா.
அதிபர் டிரம்ப் பெருமிதம்
அமைதி விருது பெற்றுக் கொண்டு உரையாற்றிய அதிபர் டொனால்டு டிர்ம்ப், வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். முதல் முறையை விட 2வது முறை அதிபரான பின்பு, தனது செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக, டிரம்ப் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.
====
.