Nainar Nagendran on Murasoli Newspaper defamed Kamarajar 
தமிழ்நாடு

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் : நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran : காமராஜர் பற்றிய திருச்சி சிவாவின் பேச்சை பசப்பு வார்த்தைகள் மூலம் கடந்துவிட முடியாது. காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

MTM

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் எக்ஸ் தள பதிவு:

Nainar Nagendran on Kamarajar Issue : எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது. அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!

கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!

மேலும் படிக்க : பொற்கால ஆட்சி தந்த காமராஜரை ‘பழிப்பதா’ : ஜி.கே. வாசன் எச்சரிக்கை

உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா(Trichy Siva), பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர்

ஆர்எஸ் பாரதி, “காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்” என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.

ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள். இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா? ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின்(DMK on Kamarajar) நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran Tweet) பதிவிட்டுள்ளார்.