NTK Chief Seeman condemns Aranthangi Woman Murder 
தமிழ்நாடு

NTK : கால்நடை வளர்த்த பெண் கொல்லப்பட்ட விவகாரம் : சீமான் கோரிக்கை

NTK Seeman About Aranthangi Women Murder : கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பெண் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டுமென்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

MTM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை :

NTK Seeman About Aranthangi Women Murder : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த பர்வீன்பானு கடந்த 14 ஆம் தேதி அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது.

திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும்.

மேலும் படிக்க : நிராகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பம்: நீதிமன்றத்தை நாடிய சீமான்

ஆகவே, பர்வீன்பானுவை(Parveen Banu Murder) கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க : வினாத்தாள் குளறுபடி, குரூப் - 4 தேர்வை ரத்து செய்க : NTK சீமான்